TNPSC-POLICE EXAM – சந்திப்பிழை அறிதல்-நீக்குதல்

சந்திப்பிழை அறிதல்

சந்திப்பிழை அறிதல்

சந்திப் பிழையை நீக்குதல்

வல்லின எழுத்துக்கள் ஆறு – க், ச், ட், த், ப் இவைகளில் க், ச், த், ப் ஆகிய எழுத்துகள் மிகவும் வலிமையானவை. ட்,ற – ஆகிய இரண்டு எழுத்துகளும் மொழிக்கு முதலில் வர இயலாதவை வல்லினம் என்று அழைக்கப்படும்.

வல்லினம் மிகும் இடங்களும் மிகா இடங்களும் வல்லினம் மிகும் இடங்கள்

  1. இரண்டாம் வேற்றுமை உருபிற்குப் பின் வல்லினம் மிகும் (ஐ)

குழந்தையை + கண்டேன்₌ குழந்தையைக் கண்டேன்

பொருளை + தேடு ₌ பொருளைத்தேடு

புலியை + கொன்றான் ₌ புலியைக் கொன்றான்

நூலை + படி ₌ நூலைப்படி

  1. நான்காம் வேற்றுமை உருபிற்குப் பின் வல்லினம் மிகும்.

வீட்டிற்கு + சென்றான் ₌ வீட்டிற்குச் சென்றான்

கல்லூரிக்கு + போனாள் ₌ கல்லூரிக்குப் போனாள்

  1. ஆறாம் வேற்றுமைத் தொகையில் வலி மிகும். ‘அது’ – மறைந்திருப்பது

தாமரை+ பூ ₌ தாமரைப்பூ

குதிரை + கால் ₌ குதிரைக்கால்

  1. ஏழாம் வேற்றுமைத் தொகையில் வலி மிகும்.

குடி + பிறந்தார் ₌ குடிப்பிறந்தார்

வழி + சென்றார் ₌ வழிச்சென்றார்

  1. வன்றொடர்க் குற்றியலுகரத்தின் பின் வல்லினம் வர மிகும் (வல்லெழுத்தை அடுத்து வந்த குற்றிலுகரம்)

பாக்கு + தூள் ₌ பாக்குத்தூள்

தச்சு + தொழில் ₌ தச்சுத்தொழில்

கேட்டு + கொடு ₌ கேட்டுக்கொடு

பத்து + பாட்டு ₌ பத்துப்பாட்டு

படிப்பு + செலவு ₌ படிப்புச்செலவு

பற்று + தொகை ₌ பற்றுத்தொகை

  1. மென்தொடர்க் குற்றியலுகரத்தின் பின் சில இடங்களில் வல்லினம் மிகும்.

இரும்பு + தூள் ₌ இரும்புத்தூள்

மருந்து + கடை ₌ மருந்துக்கடை

கன்று + குட்டி ₌ கன்றுக்குட்டி

  1. அ, இ, உ என்னும் சுட்டெழுத்துகளின் பின்னும் ‘எ’ என்னும் வினா எழுத்திற்குப் பின்னும் வலி மிகும்.

அ+ கடல் ₌ அக்கடல்

இ + பாடம் ₌ இப்பாடம்

உ + சிறுவன் ₌ உச்சிறுவன்

எ + தொழில் ₌ எத்தொழில்

  1. சுட்டு, வினாக்களின் திரிபுகளான அந்த, இந்த, எந்த என்னும் சொற்களின் பின் வல்லினம் மிகும்.

அந்த + கிணறு ₌ அந்தக்கிணறு

இந்த +தமிழ் ₌ இந்தத்தமிழ்

எந்த + செயல் ₌ எந்தச்செயல்

  1. அந்த, இந்த, அப்படி, இப்படி என்னும் சுட்டுச் சொற்களின் பின் வல்லினம் மிகும்.

அந்த + பையன் ₌ அந்தப்பையன்

இந்த + சிறுவன் ₌ இந்தச்சிறுவன்

அப்படி + செய் ₌ அப்படிச்செய்

இப்படி +பார் ₌ இப்படிப்பார்

  1. எந்த, எப்படி, எங்கு என்ற வினாச் சொற்களின் பின் வல்லினம் மிகும்.

எங்கு + பார்த்தாய் ₌ எங்குப்பார்த்தாய்?

எப்படி + சாதித்தாய் ₌ எப்படிச்சாதித்தாய்?

எந்த + செடி ₌ எந்தச்செடி?

  1. நிலைமொழி ஈற்றில் உயிரெழுத்து நிற்கää வருமொழி முதலில் வரும் வல்லினம் மிகுந்து ஒலிக்கும் (உயிரீற்றுச் சொற்களின் பின் வல்லினம் மிகும்)

நிலா+ சோறு ₌ நிலாச்சோறு

மழை+ காலம் ₌ மழைக்காலம்

பனி + துளி ₌ பனித்துளி

  1. இருபெயரொட்டுப் பண்புத்தொகையில் வல்லினம் மிகும்

சாரை + பாம்பு ₌ சாரைப்பாம்பு

மார்கழி + திங்கள் ₌ மார்கழித்திங்கள்

மல்லி +பூ ₌ மல்லிப்பூ

  1. பண்புத்தொகையில் வல்லினம் மிகும்

சதுரம் + பலகை ₌ சதுரப்பலகை

வட்டம் + பாறை ₌ வட்டப்பாறை

பச்சை + பட்டு ₌ பச்சைப்பட்டு

  1. அகர இகர ஈற்று வினையெச்சத்தின் பின் வல்லினம் மிகும்

தேட + சொன்னான் ₌ தேடச்சொன்னான்

வர + சொன்னான் ₌ வரச்சொன்னான்

ஓடி + பிடித்தான் ₌ ஓடிப்பிடித்தான்

  1. ஓரெழுத்து ஒரு மொழிக்குப் பின் வல்லினம் மிகும்

பூ +பறித்தான் ₌ பூப்பறித்தான்

கை + கரண்டி ₌ கைக்கரண்டி

தீ + பற்றியது ₌ தீப்பற்றியது

  1. ஆய், போய் என்னும் வினையெச்சத்தின் பின் வல்லினம் மிகும்

நன்றாய் + பேசினார்₌ நன்றாய்ப்பேசினார்

போய் + தேடு ₌ போய்த்தேடு

  1. இனி, தனி மற்று, மற்ற, மற்றை என்னும் சொற்களின் பின் வரும் வல்லினம் மிகும்

இனி + காணலாம் ₌ இனிக்காணலாம்

தனி + தமிழ் ₌ தனித்தமிழ்

மற்று + கண்டவை ₌ மற்றுக்கண்டவை

மற்ற+ பொருள்கள் ₌ மற்றப்பொருள்கள்

மற்றை + கூறுகள் ₌ மற்றைக் கூறுகள்

  1. என, ஆக என்னும் சொற்களுக்குப் பின் வரும் வல்லினம் மிகும்.

என + கூறினான் ₌ எனக்கூறினான்

ஆக + சொன்னான் ₌ ஆகச்சொன்னான்

  1. சால, தவ என்னும் உரிச்சொற்களின் பின் வரும் வல்லினம் மிகும்

சால + சிறந்தது ₌ சாலச்சிறந்தது

தவ + பெரிது ₌ தவப்பெரிது

  1. ஈறுகெட்ட எதிரிமறைப் பெயரெச்சத்தின் பின்வரும் வல்லினம் மிகும்

உண்ணா + சோறு ₌ உண்ணாச்சோறு

ஓடா + குதிரை ₌ ஓடாக்குதிரை

அழியா + புகழ் ₌ அழியாப்புகழ்

  1. தனிக்குறிலையடுத்து வரும் ஆ என்னும் நெடிலுக்குப் பின்வரும் வல்லினம் மிகும்

பலா + சுளை ₌ பலாச்சுளை

இரா + பகல் ₌ இராப்பகல்

கனா + காலம் ₌ கனாக்காலம்

  1. முற்றியலுகரச் சொற்களின் பின் வல்லினம் மிகும்

திரு + குறள் ₌ திருக்குறள்

பொது + சொத்து ₌ பொதுச்சொத்து

  1. இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையில் வல்லினம் மிகும்

தண்ணீர் + குடம் ₌ தண்ணீர்க்குடம்

மலர் + கூடை ₌ மலர்க்கூடை

  1. மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையில் வல்லினம் மிகும்

மரம் + பெட்டி ₌ மரப்பெட்டி

இரும்பு + சாவி ₌ இரும்புச்சாவி

  1. நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையில் வல்லினம் மிகும்

சட்டை + துணி ₌ சட்டைத்துணி

குடை + கம்பி ₌ குடைக்கம்பி

  1. ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையில் வல்லினம் மிகும்

அடுப்பு + புகை ₌ அடுப்புப்புகை

விழி + புனல் ₌ விழிப்புனல்

  1. உவமைத்தொகையில் வல்லினம் மிகும்

பவளம் + பற்று ₌ பவளப்பற்று

மலர் + கண் ₌ மலர்க்கண்

  1. ட, ற, ஒற்று இரட்டிக்கும் உயிர்தொடர், நெடி தொடர் குற்றியலுகரத்திற்குப் பின் வல்லினம் மிகும்

வயிறு + போக்கு ₌ வயிற்றுப்போக்கு(உயிர்த்தொடர்)

முரடு + காளை ₌ முரட்டுக்காளை

நாடு + பற்று ₌ நாட்டுப்பற்று (நெடில்தொடர்)

காடு + தேன் ₌ காட்டுத்தேன்

வல்லினம் மிகா இடங்கள்:

  1. இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வல்லினமிகாது

தமிழ் + கற்றார் ₌ தமிழ் கற்றார்

நீர் + குடித்தான் ₌ நீர் குடித்தான்

துணி + கட்டினான் ₌ துணி கட்டினான்

  1. உம்மைத் தொகையில் வல்லினம் மிகாது

தாய் + தந்தை ₌ தாய் தந்தை

இரவு + பகல் ₌ இரவு பகல்

செடி+கொடி ₌ செடி கொடி

  1. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் தவிர்த்து மற்றப் பெயரெச்சங்களின் பின் வல்லினம் மிகாது

நல்ல + குழந்தை ₌ நல்ல குழந்தை

படித்த + பெண் ₌ படித்த பெண்

செய்யாத+ செயல் ₌ செய்யாத செயல்

  1. உயர்திணைப் பொதுப்பெயர்களின் பின் வல்லினமிகாது

தொழிலாளர் + தலைவர் ₌ தொழிலாளர் தலைவர்

மாணாக்கர் + கூடினர் ₌ மாணாக்கர் கூடினர்

தாய் + பாடினாள் ₌ தாய் பாடினாள்

  1. அஃறிணை வினைமுற்றின் பின் வல்லினம் மிகாது

முழங்கின + சங்குகள் ₌ முழங்கின சங்குகள்

பாடின + குயில்கள் ₌ பாடின குயில்கள்

வந்தது + கப்பல் ₌ வந்தது கப்பல்

  1. எட்டு, பத்து தவிர மற்ற எண்களின் பின் வல்லினம் மிகாது

ஒன்று + கொடு ₌ ஒன்று கொடு

இரு + சீர் ₌ இருசீர்

மூன்று + கிளி ₌ மூன்று கிளி

  1. அது, இது என்னும் சட்டகளின் பின்னும் எது? யாது? என்னும் வினாச் சொற்களின் பின்னும் வல்லினம் மிகாது.

அது + போயிற்று ₌ அது போயிற்று

இது + பறந்தது ₌ இது பறந்தது

எது + கண்டது ₌ எது கண்டது?

யாது + சொல் ₌ யாது சொல்?

  1. அத்தனை, இத்தனை, எத்தனை எனும் சொற்களின் பின் வல்லினம் மிகாது.

அத்தனை + பழங்களா? ₌ அத்தனை பழங்களா?

இத்தனை + பூக்களா? ₌ இத்தனை பூக்களா?

எத்தனை + தேங்காய்? ₌ எத்தனை தேங்காய்?

  1. வினாவை உணர்த்தும் ஆ, ஓ, ஏ, யா என்னும் வினா எழுத்துகளின் பின் வல்லினம் மிகாது

அவளா + தைத்தாள் ₌ அவளா தைத்தாள்?

இவளோ + போனாள் ₌ இவளோ போனாள்?

அவனே + செல்வான் ₌ அவனே செல்வான்?

  1. சில, பல என்னும் சொற்களின் பின் வல்லினம் மிகாது

பல + குடிசைகள் ₌ பல குடிசைகள்

சில + சொற்கள் ₌ சில சொற்கள்

  1. விளிப்பெயர் பின்னும், வியங்கோள் வினைமுற்றின் பின்னும் வல்லினம் மிகாது

கண்ணா + கேள் ₌ கண்ணாகேள்

வேலா + செல் ₌ வேலாசெல்

வாழ்க + தமிழ் ₌ வாழ்கதமிழ்

  1. எழுவாய்த் தொடரில் வல்லினம் மிகாது

நாய் + போனது ₌ நாய் போனது

வள்ளி + படித்தாள் ₌ வள்ளி படித்தாள்

  1. வினைத்தொகையில் வல்லினம் மிகாது

ஊறு + காய் ₌ ஊறுகாய்

ஆடு + கொடி ₌ ஆடு கொடி

விரி + கதிர் ₌ விரி கதிர்

  1. அடுக்குத் தொடரில் வல்லினம் மிகாது

தீ + தீ ₌ தீதீ

பாம்பு + பாம்பு ₌ பாம்புபாம்பு

  1. சில ஆறாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகாது

வள்ளுவர் +கருத்து ₌ வள்ளுவர் கருத்து

ஒளவை + சொல் ₌ ஒளவை சொல்

  1. அவை இவை என்னும் சொற்களின் பின் வரும் வல்லினம் மிகாது

அவை+போயின ₌ அவை போயின

இவை + செய்தன ₌ இவை செய்தன

  1. படியென்னும் சொல் வினையோடு சேர்ந்து வருமிடத்தில் வல்லினம் மிகாது

வரும்படி +கூறினான் ₌ வரும்படி கூறினான்

போகும்படி + சொன்னான் ₌ போகும்படி சொன்னான்

  1. இரட்டைக் கிளவியில் வல்லினம் மிகாது

கல + கல ₌ கலகல

பள + பள ₌ பளபள

  1. அவை, இவை என்னம் சுட்டுச் சொற்களின் பின் வல்லினம் மிகாது

அவை + சென்றன ₌ அவை சென்றன

இவை + செய்தன ₌ இவை செய்தன

  1. அது, இது என்னும் சுட்டுகளின் பின்வரும் வல்லினம் மிகாது

அது + பறந்தது ₌ அது பறந்தது

இது + கடித்தது ₌ இது கடித்தது

  1. எது, யாது என்னும் வினாச்சொற்களின் பின் வல்லினம் மிகாது

எது + பறந்தது ₌ எது பறந்தது?

யாது + தந்தார் ₌ யாது தந்தார்?

  1. இரண்டு வடசொற்கள் சேரும்போது வல்லினம் மிகாது

சங்கீத+ சபா ₌ சங்கீத சபா

மகாஜன + சபா ₌ மகாஜன சபா

  1. சில வினையெச்சத் தொடரில் வல்லினம் மிகாது

வந்து + போனான் ₌ வந்து போனான்

செய்து + கொடுத்தான் ₌ செய்து கொடுத்தான்

Leave a Comment