பத்தாம் வகுப்பு – சமூக அறிவியல் (புவியியல்)- 5 மதிப்பெண் வினா-விடைத் தொகுப்பு
அலகு – 1
இந்தியா – அமைவிடம், நிலத்தோற்றம்மற்றும்வடிகாலமைப்பு
1. இமய மலையின் உட்பிரிவுகளையும், அதன் முக்கியத்துவம் பற்றியும் விவரி.
மூன்று உட்பிரிவுகள்:
I. டிரான்ஸ் (அ) மேற்கு இமயமலைகள்
ஜம்மு-காஷ்மீர், திபெத் பீடபூமியில் உள்ளது லடாக், காரக்கோரம், கைலாஸ் மலைத்தொடர்கள்
II. இமயமலைகள் (மத்திய)
மூன்று பிரிவுகள்
பெரிய (அ) இமாத்ரி
- வடக்கு பகுதி, குறைந்த மழை, உயர்ந்த சிகரங்கள்
சிறிய (அ) இமாச்சல்
- மத்திய மலைத்தொடர், புகழ்பெற்ற கோடை வாழிடங்கள்
வெளி (அ) சிவாலிக்
- ஒரு பகுதி ஆறுகளால் உருவான படிவு, கிழக்கு பகுதி டுயர்ஸ், மேற்குப் பகுதி டூன்கள்
III. கிழக்கு (அ) பூர்வாஞ்சல் இமயமலைகள்
- இமயமலையின் கிழக்கு கிளை, வடகிழக்கு மாநிலங்களில் உள்ளது
இமயமலையின் முக்கியத்துவம்;
- இந்தியாவிற்கு இயற்கை அரண்
- வற்றாத நதிகளின் பிறப்பிடம்
- சுற்றுலாத் தளம்
- பல்லுயிர் மண்டலம்
- கோடை வாழிடம், புனித தளங்கள்
- தென்மேற்கு பருவக்காற்றை தடுத்து வடஇந்தியாவிற்கு கனமழை
- காடுசார்ந்த தொழில்களுக்கு மூலப்பொருள் தருதல்
2. தீப கற்ப ஆறுகளைப் பற்றி விவரி.
- தென் இந்தியாவில் பாயும் ஆறுகள்
- பெரும்பாலான ஆறுகள் மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தி
- இவை பருவகால (அ) வற்றும் ஆறுகள் ஆகும்
- இரு வகைப்படும்
கிழக்கு நோக்கி பாயும் ஆறுகள்; (வங்காள விரிகுடாவில் கலக்கும்)
மகாநதி;
- 85 கி.மீ நீளம், சத்திஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் மாவட்டம் – சிகாவில் உற்பத்தி
கோதாவரி (நீளமான ஆறு);
- 1465 கி.மீ. நீளம், மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டம் – மேற்கு தொடர்ச்சிமலையில் உற்பத்தி
கிருஷ்ணா ;
- 1400 கி.மீ நீளம், மகாராஷ்டிரா மாநிலம் மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தி
காவேரி (தென்கங்கா)
- 800 கி.மீ. நீளம், கர்நாடகா-குடகுமலை, தலைக்காவேரியில் உற்பத்தி.
2. மேற்கு நோக்கி பாயும் ஆறுகள்; (அரபிக்கடலில் கலக்கும்)
நர்மதை ;
- 1312 கி.மீ நீளம், மத்திய பிரதேசம்-அமர்கண்டாக் பீடபூமி உற்பத்தி
தபதி;
724 கி.மீ நீளம், மத்திய பிரதேசம் முல்டாயில் உற்பத்தி
3. கங்கை ஆற்று வடிநிலம் குறித்து விரிவாக எழுதுக
- உற்பத்தி-உத்தரகாண்ட் மாநிலம், உத்தர்காசி மாவட்டம், கங்கோத்ரி
- நீளம்-2525 A.மீ)
- துணை ஆறுகள் கோமதி, காக்ரா, கோசி, யமுனை, சோன், சாம்பல்
- கலக்கும் இடம்- வங்காள விரிகுடாகடல்
- இதன் தொகுப்பு இந்தியாவின் மிகப்பெரிய வடிகால் அமைப்பு
- இதன் ஆற்றங்கரையில் மக்களடர்த்தி மிக்க பலநகரங்கள்
- கங்கை, பிரம்மபுத்திரா சேர்ந்து இந்தியாவில் மிகப்பெரிய டெல்டாவை உருவாக்குகின்றன.
- வங்கதேசத்தில் கங்கை பத்மா என அழைக்கப்படுகிறது.
அலகு-2
காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள்
1. தென்மேற்கு பருவக்காற்று குறித்து எழுதுக
- இந்திய காலநிலையின் முக்கிய அம்சம்
- ஜீன் முதல் வாரம் தென் இந்தியாவிலும், இரண்டாவது வாரம் கொங்கணக் கடற்கரையிலும், ஜீலை 15-ல் இந்திய பகுதிகளுக்கு முன்னேற்றம்
- எல்நினோ நிகழ்வானது இக்காலத்தில் மிகப்பெரிய தாக்கம்
- இதன் இடி, மின்னலுடன் கூடிய துவக்கம் பருவமழை வெடிப்பு
- தென்முனையை அடையும் போது இருகிளையாக பிரிகிறது.
அரபிக்கடல் கிளை
- மேற்கு தொடர்ச்சி மலையின் மேற்கில் அதிக மழை. இமயமலையால் தடுக்கப்பட்டு வட இந்தியா முழுவதும் கனமழை இராஜஸ்தான், வடமேற்கில் மழை இல்லை
வங்காள விரிகுடா கிளை
- மேகலயாவில் உள்ள மௌசின்ராமில் கனமழை நாட்டின் மொத்த மழைப்பொழிவில் 75% தருகிறது தமிழ்நாடு மழை மறைவால் குறைந்த மழை
2. இந்திய காடுகள் பற்றி விவரிக்கவும்
- இந்தியக் காடுகள் எட்டு வகைப்படும்
1. அயனமண்டல பசுமை மாறாக்காடுகள்
- 200 செ.மீ மழை , 70% ஈரப்பதம்.
- ரப்பர், ரோஸ் தென்னைமரங்கள்,
- கேரளா, கர்நாடக பகுதிகள்
2. அயனமண்டல இலையுதிர்க் காடுகள்
- 100 செ.மீ முதல் 200 செ.மீ வரை மழை 60% – 70% ஈரப்பதம்,
- தேக்கு, சந்தனம், மூங்கில் மரங்கள்,
- வடசமவெளி, பஞ்சாப், ஹரியானா பகுதிகள்
3. அயன மண்டல வறண்டக் காடுகள்
- 50-100 செ.மீ மழை, குறைந்த ஈரப்பதம்,
- பலா, ஆலமரம், ஈச்சமரம்,
- கிழக்கு ராஜஸ்தான், பஞ்சாப்
4. மலைக்காடுகள்
- கிழக்கு இமயமலைக்காடுகள்-கிழக்கு இமயமலை சரிவுகளில் உள்ளவை
- மேற்கு இமயமலைக்காடுகள்-ஜம்மு-காஷ்மீர், இமாச்சல், உத்ரகாண்ட்
5. அல்பைன்காடுகள்
- 2400 மீ மேல் கிழக்கு இமயமலை பகுதிகள்
- ஊசியிலை, ஓக், பைன் மரங்கள்
6. ஓத அலைக்காடுகள்
- கங்கை-பிரம்மபுத்திரா, கோதாவரி, மகாநதி, டெல்டாப் பகுதிகள்
7. கடற்கரையோரக் காடுகள்
- சவுக்கு, பனை, தென்னை
- கேரளா, கோவா
8. ஆற்றங்கரை காடுகள்
- கங்கை , யமுனை, (குறிப்பாக காதர் பகுதிகள்)
- புளியமரம், பசுமையான புதர் காடுகள்
அலகு-3
வேளாண்மைக் கூறுகள்
1. இந்திய மண் வகைகளைக் ஏதேனும் ஐந்தினை குறிபிட்டு, மண்ணின் பண்புகள் மற்றும் பரவல் பற்றி விவரி
வண்டல்மண்
- வெளிர்நிறமுடைய மணற்பாங்கானது
- பரவல்-கங்கை, பிரம்மபுத்திரா, பஞ்சாப், ஹரியானா
கரிசல் மண்
- ஈரத்தை தக்க வைக்கும் சேறாகும்
- பரவல் – மகாராஷ்டிரா, தெலுங்கானா
செம்மண்
- உப்புகரைசல், வெண்களிப்பாறை, வெடிப்புடன் கூடிய செம்மண் படிவு
- பரவல் – கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா
சரளைமண்,
- உயரமான மலைகளில் அதிக அமிலத்தன்மையும் தாழ்வான பகுதியில் குறைந்தும் இருக்கும்
- பரவல் – அசாம் குன்று, கேரளா, கர்நாடகா மலையடிவாரம்
மலைமண்,
- மென்மையான மண் மற்றும் பாறைத்துகள்
- பரவல் – இமாச்சல், உத்ரகாண்ட், சிக்கிம்
பாலைமண்
- குறைந்த வெளிர்நிறம், ஈரப்பதம் (இலைமக்கு)
காரமண்
- சிதைக்கப்படாத பாறை, சிதைவுற்ற கனிமங்கள்
களிமண்
- ஈரத்தன்மை -இலைமக்கு கருமை நிறம்
2. பல்நோக்கு திட்டம் என்றால் என்ன? ஏதேனும் இரண்டு இந்திய பல்நோக்கு திட்டங்கள் பற்றி எழுதுக.
பல்நோக்கு திட்டம்;
- இது ஒரு அறிவியல் முறையிலான நீர்வள மேலாண்மை திட்டம்
- ஆற்றின் குறுக்கே பல்வேறு நோக்கங்களுக்காக அணைகளைக் கட்டுவதால் இவைபல்நோக்கு ஆற்றுப் பள்ளத்தாக்குத் திட்டங்கள் என்று அழைக்கப்படுகிறது.
- நீர்மின் சக்தி மற்றும் நீர்பாசனம் இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.
1. பக்ரா நங்கல் திட்டம்
- சட்லஜ் நதியின் குறுக்கே உள்ள உலகின் மிகப்பெரிய புவிஈர்ப்பு அணை
- பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் பயனடைகிறது
- 52,609 ச.கி.மீ. நீர்பாசன பரப்பு
- 1500 மெகாவாட் நீர்மின்சக்தி உற்பத்தி
2. ஹிராகுட் திட்டம்
- மகாநதி குறுக்கே கட்டப்பட்ட உலகின் மிக நீளமான அணை ஒடிசா பயன்பெறுகிறது.
- 1,41,600 ச.கி.மீ. நீர்பாசன பரப்பு
- 347.5 மெகாவாட் நீர்மின்சக்தி உற்பத்தி
3. தீவிர வேளாண்மை மற்றும் தோட்ட வேளாண்மையின் பண்புகளை வெளிக்கொணர்க
தீவிர வேளாண்மை;
- இயந்திரங்கள், நவீன யுக்திகள் மூலம் அதிக உற்பத்தி
- சிறிய நிலத்தில் பூச்சி, கலைக்கொல்லி, ரசாயனஉரம்
- சிறிய அளவு கால்நடை வளர்ப்பு எண்ணிக்கையை பெரிய அளவு பண்ணைகள் மூலம் வளர்க்க வழிவகை
- பஞ்சாப், ராஜஸ்தான், உத்திரபிரதேசத்தில் இம்முறை உள்ளது.
தோட்ட வேளாண்மை;
- தோட்டப்பயிர்கள் ஏற்றுமதிக்காக பயிரிடப்படுகிறது.
- மலைச்சரிவுகளில் பெரிய எஸ்டேட் பண்ணைகளாகும்.
- ஏற்றுமதிக்காக கடற்கரைக்கு அருகில் பயிரிடப்படுகிறது.
- தேயிலை, காப்பி, இரப்பர், வாசனை பொருட்கள் தோட்ட பயிர்களாகும்.
4. நெல் மற்றும் கோதுமை பயிரிடுவதற்கு ஏற்ற புவியியல் சூழல்கள் பற்றி விவரி.
நெல்;
- இந்தியாவின் பூர்வீகப் பயிர் உற்பத்தியில் உலகில் இரண்டாமிடம்
- அயனமண்டல பயிர்
- 24°C சராசரி வெப்பமும், 150 செ.மீ ஆண்டு மழையும் தேவை
- வளமான களிமண் (அ) வண்டல் மண் சாகுபடிக்கு ஏற்றது.
- பயிரிட அதிக தொழிலாளர்கள் தேவை மூன்று முறைகளில் பயிரிடப்படுகிறது.
கோதுமை;
- இரண்டாவது (நெல்லுக்கு அடுத்து) முக்கிய உணவுப் பயிர்
- நாட்டின் சாகுபடியில் 24%, மொத்த உணவு உற்பத்தியில் 54%
- விதைக்கும் போது 10-15°C வெப்பமும், முதிரும் போது 20-25°C வெப்பமும் தேவை
- 85% கோதுமை உற்பத்தி உத்திரபிரதேசம், பஞ்சாப், ஹரியானா, இராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகும்
- கரிசல் மண் உள்ள மகாராஷ்டிரா, குஜராத்திலும் பயிரிடப்படுகிறது.
அலகு -4
வளங்கள் மற்றும் தொழிலகங்கள்
- இந்தியாவில் உள்ள பருத்தி நெசவாலைகளின் பரவல் பற்றி எழுதுக 34000 நெசவாலைகளுடன் இந்தியா இத்துறையில் உலகில் இரண்டாமிடம் தற்போது இந்தியாவில் 1719 பருத்தி நெவாலைகள் உள்ளன.
- 188-பொதுத்துறையும், 147 கூட்டுறவு நிறுவனமும், 1284 தனியார் துறை நெசவாலைகள் உள்ளன.
- மும்பையும் அதன் புறநகர் பகுதியில் பருத்தி அதிக அளவு காணப்படுவதால் மும்பை இந்தியாவின் மான்செஸ்டர் ஆகும்
- மகாராஷ்டிராவில் உள்ள கரிசல்மண், ஈரப்பத காலநிலை, துறைமுகம், நீர்மின்சக்தி, சந்தைவசதி, போக்குவரத்து வசதி ஆகியன மும்பையில் அதிக நெசவாலைகள் இருக்க காரணமாகும்.
- தமிழ்நாட்டில் அதிக நெசவாலைகள் (200) கோயம்புத்தூர் பகுதியில் உள்ளன.
- எனவே தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று கோயம்புத்தூர் அழைக்கப்படுகிறது.
2. இந்தியாவில் இரும்பு எஃகு தொழிலகங்கள் பற்றி ஒரு தொகுப்பு எழுதுக.
- இது ஒரு முக்கிய கனிமம் சார் தொழிற்சாலை
- இதன் உற்பத்தி பொருட்கள் மற்ற தொழிலகங்களுக்கு மூலப்பொருளாக உள்ளது.
- ஒரு நாட்டின் தொழில் வளர்ச்சி இரும்பு எஃகு உற்பத்தியின் அளவைக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது
- ஜார்கண்ட் மேற்குவங்கம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் அதிக அளவில் இரும்பு எஃகு தொழிலகங்கள் உள்ளன.
இந்தியாவின் முக்கிய இரும்பு எஃகு நிறுவனங்கள்
- டாட்டா – 1911- ஜாம்ஷெட்பூர்
- இந்தியா – 1972 – பர்ன்பூர், ஹிராப்பூர்
- இந்துஸ்தான் – 1957 பிலாய்
- சேலம் – 1982- சேலம் (தமிழ்நாடு)
- விசாகபட்டினம் -1981- விசாகபட்டினம்
- விஜயநகர் -1994 – டோர்நகல்
அலகு : 5
இந்தியா- மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம்
1. நகரமயமாக்கம் என்றால் என்ன? அதன் சிக்கல்கள் யாவை?
நகரமயமாக்கல்;
- கிராமபுற சமுதாயம் நகர்புறச் சமுதாயமாக மாற்றமடைவதே நகரமயமாக்கல் என்கிறோம்.
நகரமயமாக்கலின் தாக்கங்கள்;
- நகர விரிவாக்கம்,
- மக்கள் நெருக்கடி
- குடியிருப்புகள் பற்றாக்குறை,
- குடிசைப் பகுதிகள் தோற்றம்
- போக்குவரத்து நெரிசல் அதிகம்,
- குடிநீர் பற்றாக்குறை
- வடிகால் பிரச்சனை,
- குற்றங்கள் அதிகரிப்பு
- திடக்கழிவு மேலாண்மை சிக்கல்
2. இந்தியாவில் செயற்கைக்கோள் தகவல் தொடர்பின் முக்கியத்துவத்தை விளக்குக
- தொடர்ச்சியாக பெரிய பரப்பிலான பதிமம் மற்றும் தகவல்கள் அளிப்பதால் இந்தியாவில் செயற்கைகோள் ஒரு முக்கிய தகவல் தொடர்பு சாதனம் ஆகும். இந்த பதிமங்கள் மூலம் வானிலை ஆய்வு, வானிலை முன்அறிவிப்பு, இயற்கை பேரழிவு, எல்லைப்பகுதி கண்காணிப்பு போன்ற பணிகளை செய்யலாம்.
- இந்தியாவில் செயற்கைக்கோள் தகவல் தொடர்ப்பு இரண்டு பிரிவுகளை கொண்டது.
- இந்திய தேசிய செயற்கைக்கோள் அமைப்பு (INSAT) இது தொலை தொடர்பு, வானியல் ஆய்வு, பல்வேறு திட்டங்கள் அடங்கிய ஒரு பல்நோக்கு அமைப்பு கைப்பேசி, தொலைபேசி, வானொலிமற்றும் தொலைக்காட்சிக்கு சமக்கை அனுப்புதல் வானிலை, இராணுவ பயன்பாட்டிற்கு உதவுகிறது.
- இந்திய தொலையுணர்வு செயற்கைகோள் அமைப்பு (IRS)
3. இந்தியாவின் சாலைகளை வகைப்படுத்தி விளக்குக?
இந்திய சாலைகளின் வகைகள்:
தேசிய நெடுஞ்சாலை
- மாநில தலைநகரங்கள் துறைமுகங்கள், ரயில் நிலையங்கள், சுற்றுலா மையங்கள், தொழில் மையங்களை இணைப்பவை இச்சாலைகளுக்கு மத்திய அரசு பொறுப்பாகும்.
மாநில நெடுஞ்சாலைகள்
- மாநிலத்தின் முக்கிய மாநகரங்கள், நகரங்கள், மாவட்ட தலைநகரங்களை மாநில தலைநகருடனும், தேசிய நெடுஞ்சாலையுடனும் இணைப்பவை,
மாவட்ட சாலைகள்
- மாவட்ட வட்டார தலைமை இடங்களை மாநில, தேசிய நெடுங்சாலைகளுடன் இணைப்பவை.
கிராமபுற சாலைகள்
- பல்வேறு கிராமங்களை அருகில் உள்ள நகரங்களுடன் இணைப்பவை. கிராம பஞ்சாயத்து பராமரிப்பு
எல்லைப்புறச்சாலைகள்
- நாட்டின் எல்லைப்பகுதியில் உள்ள முக்கிய சாலைகள்
விரைவுச்சாலைகள்
- நன்கு மேம்படுத்தப்பட்ட பல வழிகளை கொண்ட அதிவேக போக்குவரத்து சாலைகள்
பன்னாட்டு நெடுஞ்சாலைகள்
- இந்தியாவை அண்டை நாடுகளுடன் இணைக்கமான உறவை மேம்படுத்த இணைக்கப்பட்டுள்ள சாலைகள்
அலகு – 6
தமிழ்நாடு – இயற்கைப் பிரிவுகள்
1. தமிழ்நாட்டின் பீடபூமி நிலத்தோற்றத்தின் தன்மையை விவரிக்கவும்
- தமிழ்நாட்டிலுள்ள பீடபூமி மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கும் கிழக்கு தொடர்ச்சி மலைகளுக்கும் இடையில் அமைந்துள்ளது.
- 60,000 ச.கி.மீ. கொண்ட முக்கோண வடிவம்
பாரமஹால் பீடபூமி
- தமிழ்நாட்டின் வடமேற்கில் உள்ளது.
- தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் இதில் அடங்கும்
கோயம்புத்தூர் பீடபூமி
- சேலம், கோயம்புத்தூர், ஈரோடு மாவட்டங்கள் பவானி, நொய்யல், அமராவதி ஆறுகள் இந்த பீடபூமியில் பள்ளத்தாக்குகளை உருவாக்குகிறது. சிகூர் பீடபூமி
- நீலகிரி பகுதியில் உள்ளது
மதுரை பீடபூமி
- மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ளது.
- வைகை மற்றும் தாமிரபரணி வடிநிலங்கள் உள்ளன
2. காவிரி ஆறு குறித்து தொகுத்து எழுதுக
- கர்நாடக மாநிலம் – குடகு மாவட்டம் – தலைக்காவிரியில் உற்பத்தி கர்நாடகா – தமிழ்நாட்டிற்கு 64 கி.மீ எல்லையாக உள்ளது.
- தர்மபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல் நீர்வீர்ச்சியை பெற்றுள்ளது.
- சேலம் மாவட்டத்தில் மேட்டூர் அணை உள்ளது
- துணை ஆறுகள் – பவானி நொய்யல், அமராவதி
- திருச்சி மாவட்டத்தில் கல்லணை உள்ளது
- திருச்சி மாவட்டத்தில் இரு கிளையாக பிரிந்து (கொள்ளிடம், காவிரி) ஸ்ரீரங்கம் தீவை உருவாக்குகிறது.
- இறுதியாக கடலூருக்குத் தெற்கே கடலில்கலக்கிறது.
3. தமிழ்நாட்டின் கோடை மற்றும் குளிர் பருவங்களின்பண்புகளை விவரிக்கவும்
கோடைகாலம்: –
- மார்ச் முதல் மே வரை சூரியனின் கதிர் தென்னிந்தியாவில் செங்குத்தாக விழுவதால் பூமத்திய ரேகையிலிருந்து வெப்பநிலை உயர்கிறது.
- தமிழ்நாடு கடக ரேகைக்கு தெற்கில் உள்ளதால் அதிக வெப்பநிலை பெறுகிறது.
- வெப்பநிலை 30°C முதல் 40°C வரை வேறுபடும்
- முன் பருவமழை, வெப்பசலனம் மூலம் மழையை பெறுகிறது.
குளிர்காலம்:
- ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் தமிழ்நாட்டில் சூரியனின் கதிர்கள் சாய்வாக விழுவதால் காலநிலை குளிராக உள்ளது.
- வெப்பநிலை 15°C முதல் 25°C வரை வேறுபடும்
- மலைப்பகுதியில் 5°C க்கு குறைவாக வெப்பம் மூடுபனியை உருவாக்குகிறது.
- பொதுவாக வறண்ட வானிலையே காணப்படுகிறது.
4. தமிழ்நாட்டில் உள்ள மண் வகைகளின், பரவல் மற்றும் அவற்றின் பண்புகளை விளக்குக
1. வண்டல் மண்
- ஆறுகளால் படியவைக்கும் நுண் படிவுகளால் உருவான வளம் மிக்க மண்
- ஆற்றுப் பள்ளத்தாக்கு (தஞ்சாவூர், நாகை, திருநெல்வேலி) பகுதிகளில் இம்மண் அதிகம் உள்ளது.
- நெல், கரும்பு, வாழை மற்றும் மஞ்சள் நன்கு வளரும்
2. கரிசல் மண்
- தீப்பாறைகள் சிதைவால் உருவாகிறது
- தக்காண பீடபூமி, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களில் காணப்படுகிறது.
- பருத்தி, கம்பு, சோளம், கால்நடை தீவனங்கள் பயிரிடலாம்
3. செம்மண்
- மணல் மற்றும் களிமண் கலந்த ஈரத்தை தக்க வைக்கும் மண்
- இராம நாதபுரம், சிவகங்கையில் அதிகம் காணப்படுகிறது.
- இரும்பு ஆக்ஸைடு அதிகம் உள்ளதால் நெல், கேழ்வரகு, புகையிலை, காய்கறிகள் பயிரிடலாம்.
4. சரளை மண்
- இதில் உள்ள சத்துக்கள் அடித்து செல்வதால் உருவாகும் வளமற்ற மண்
- காஞ்சிபுரம், திருவாரூர், தஞ்சை , நீலகிரியில் உள்ளது.
- நெல், வாழை, மிளகு, காபி, தேயிலை பயிரிடலாம்
5. உவர்மண்
- சோழமண்டல கடற்கரை பகுதியில் மட்டும் உள்ளது
- பயிரிட உகந்த மண் அல்ல
5. புயலுக்கு முன்னரும் பின்னரும் மேற்கொள்ள வேண்டிய அபாய நேர்வு குறைப்பு நடவடிக்கைகளை ஏழுதுக.
புயலுக்கு முன்:
- வதந்திகளை நம்பாமல் அமைதிகாத்தல் வானொலி மற்றும் தொலைக்காட்சி பெட்டிகள் மூலம் வானிலை நிகழ்வை தெரிந்து கொள்ளல்
- விலைமதிப்புள்ள பொருட்கள் மற்றும் ஆவணங்களை பாதுகாத்தல்
- அத்தியாவசிய பொருட்கள் தயார் நிலையில் வைத்திருத்தல் வேண்டும்.
- குடியிருப்பு பாதுகாப்பை உறுதி செய்தல்
- மீனவர்களுக்கு முன்னெச்சரிக்கை செய்தல்.
புயலுக்குப் பின்:
- நிவாரண முகாம்களை மறு அறிவுப்பு வரும் வரை பாதுகத்தல்
- பாம்பு, பூச்சிகளிடமிருந்து எச்சரிக்கையாக இருத்தல்
- கழிவுகள், இறந்த விலங்குகளின் உடல்களையும் அகற்றுதல்.
- இழப்பின் உண்மையான மதிப்பு, அளவினை அதிகாரிகளிடம் தெரிவித்தல்
அலகு -7
தமிழ்நாடு – மானுடப் புவியியல்
1. தமிழ்நாட்டில் தோட்ட வேளாண்மை பற்றி விளக்குக
தோட்ட வேளாண்மை
- ஒரு பெரிய நிலப்பரப்பில் (மலைசரிவுகளில்) அறிவியல் முறைபடி ஒரே பயிரை அதிக அளவில் பயிரிடுவது (எ.கா.) காப்பி, தேயிலை, ரப்பர், முந்திரி, சின்கோனா,
காப்பி: –
- காப்பி உற்பத்தியில் தமிழகம் இந்தியாவில் இரண்டாமிடம்
- மேற்கு மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலையில் பயிரிடப்படுகிறது
தேயிலை;
- தேயிலை உற்பத்தியில் தமிழகம் இந்தியாவில் இரண்டாமிடம்
- நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலைகளில் பயிரிடப்படுகிறது
ரப்பர் :
- கன்னியாகுமாரி மலைப்பகுதியில் அதிகம் உள்ளது
சின்கோனா :
- ஆணை மலைப்பகுதியில் சின்கோனா பயிரிடப்படுகிறது
முந்திரி;
- கடலூர் மாவட்டத்தில் அதிகம் பயிராகும்
ஏலக்காய்;
- மதுரையை சுற்றியுள்ள மலைப்பகுதியில் பயிராகும்
மிளகு;
- மேற்கு, கிழக்கு தொடர்ச்சி மலைச்சரிவுகளில் பயிராகிறது
2. தமிழ்நாட்டின் நீர் ஆதாரங்களை பற்றி எழுதுக
- மனிதன் மற்றும் அனைத்து உயிரினங்களுக்கும் நீர் இயற்கையின் ஒரு விலைமதிப்பற்ற பரிசாகும்
- இந்தியாவின் மக்கள் தொகையில் 6% உள்ள தமிழ்நாடு நீர்வளத்தில் 2.5% மட்டுமே பெற்றுள்ளது.
- தமிழ்நாடு நீர் ஆதாரத்திற்கு பருவ மழையையே சார்ந்து உள்ளது
- தமிழகத்தின் ஆண்டு சராசரி மழையளவு 930 மில்லிமீட்டர்
- தமிழ்நாட்டின் நீர் தேவையை பல்நோக்கு ஆற்றுப் பள்ளத்தாக்கு திட்டங்கள் பூர்த்தி செய்கின்றன. (எ.கா.) மேட்டூர், சாத்தனூர், முல்லை பெரியார், வைகை, அமராவதி, அணைகள்
- மேற்பரப்பு நீர்வள ஆதாரங்கள்
- ஆற்று வடிநிலம், ஏரிகள், நீர்தேக்கங்கள் 95% பயன்பாடு
- நீரின் அளவு சுமார் 24,864 மில்லியன் க.மீ
- நிலத்தடி நீர்
- ஆழ்துளை கிணறு, திறந்த கிணறுகள் 80% பயன்பாடு – நீர்வளம் 22,433 மில்லியன் க.மீ
4. தமிழ்நாட்டில் அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட பகுதிகள் மற்றும் அதற்கான காரணங்களை எழுதுக
மக்கள் அடர்த்தி கொண்ட பகுதிகள்;
- சென்னை மாவட்டம் மிக அதிக மக்களடர்த்தி கொண்டது
- காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை, கோவை, கடலூர், தஞ்சாவூர், திருச்சி, வேலூர், நாகை, கன்னியாகுமரி மக்கள் அடர்த்தி அதிக மாவட்டங்கள்
மக்கள் அடத்திக்கான காரணங்கள்;
- சமவெளி பகுதியில் வாழ்வதற்கேற்ற கால நிலை
- மிதமான தட்பவெப்பநிலை, பொருளாதார செயல்களுக்கு ஏற்ற சூழல்
- கற்றோர், கல்லாதோருக்கு ஏற்ற வேலைவாய்ப்பு
- தொழில்துறை, விவசாயம் சிறந்த பகுதிகளில் மக்களடர்த்தி அதிகமாக உள்ளன
5. தமிழ்நாட்டின் பல்வேறு போக்குவரத்து முறைகளை விவரி
சாலை போக்குவரத்து;
- மொத்த சாலைகளின் நீளம் 1,67,000 கி.மீ 2.
- மாநில நெடுஞ்சாலை பராமரிப்பு
- தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி ஒன்றிய, கிராம பஞ்சாயத்து சாலைகள்
இரயில் போக்குவரத்து
- மொத்த இருப்பு பாதையின் நீளம் 6,693 கி.மீ
- தெற்கு ரயில்வே தலைமையிடம் சுமார் 690 ரயில் நிலையங்கள்
- சென்னையில் புறநகர் ரயில், பறக்கும் ரயில், மெட்ரோ ரயில் திட்டம் என வளர்ந்துள்ளது
வான்வழி போக்குவரத்து
- சென்னை நாட்டின் மூன்றாவது பெரிய விமான நிலையம்
- 4-முக்கிய சர்வதேச விமான நிலையங்கள் சென்னை , திருச்சி, கோயம்புத்தூர், மதுரை
- பயணிகள், சரக்கு போக்குவரத்திற்கு முக்கிய பங்கு
நீர்வழிப் போக்குவரத்து
- 3 பெரிய துறைமுகங்களும் (சென்னை , எண்ணூர், தூத்துக்குடி)
- 15 சிறிய துறைமுகங்களும் உள்ளன
- சிறிய துறைமுகங்கள் தமிழ்நாடு கடல்சார் வாரியத்தால் நிர்வகிக்கப்படுகிறது
- வாகன ஏற்றுமதிக்கு சென்னையும், நிலக்கரி இறக்குமதிக்கு எண்ணூர், தூத்துக்குடியும் பயன்படுகிறது.
DOWNLOAD PDF – Click Here