பத்தாம் வகுப்பு – புவியியல் 2-மதிப்பெண் – வினா விடைத் தொகுப்பு

பத்தாம் வகுப்பு – புவியியல் 2-மதிப்பெண் – வினா விடைத் தொகுப்பு

அலகு – 1

இந்தியா- அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு

1. இந்தியாவின் அண்டை நாடுகளின் பெயர்களைக் கூறுக.

  • மேற்கில் – பாகிஸ்தான்,
  • வடமேற்கில் – ஆப்கானிஸ்தான்,
  • வடக்கில் – சீனா, பூடான், நேபாளம்,
  • கிழக்கில் – வங்காளதேசம், மியன்மார்,
  • தெற்கில் – இலங்கை, மாலத்தீவுகள்

2. இந்திய திட்ட நேரத்தின் முக்கியத்துவம் பற்றி கூறுக

  • இந்தியாவின் மத்திய தீர்க்கரேகையான 82° 30′ கிழக்கு தீர்க்க ரேகையின் தல நேரம் இந்திய திட்ட நேரமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.
  • இத்தீர்க்கரேகை மிர்சாபூர் (அலகாபாத்) வழியாக செல்கிறது.
  • இந்திய திட்டநேரமானது கிரீன்வீச் சராசரி நேரத்தைவிட 5 மணி 30 நிமிடம் முன்னதாக உள்ளது.

3. தக்காண பீடபூமி குறிப்பு வரைக

  • தீபகற்ப பீடபூமியில் அமைந்துள்ள மிகப்பெரிய இயற்கை அமைப்பைக் கொண்டது
  • இது தோராயமாக முக்கோண வடிவம் கொண்டது
  • இதன் பரப்பளவு சுமார் 7 லட்சம் சதுர கி.மீ 4. இதன் உயரம் சுமார் 500 மீ முதல் 100 மீ வரை 5. இது மேற்கிருந்து கிழக்காக சரிந்துள்ளது

4. இந்தியாவின் மேற்கு நோக்கி பாயும் ஆறுகளைப் பற்றி கூறுக

  • நர்மதை,
  • தபதி,
  • மாஹி,
  • சபர்மதி
  • இவை கிழக்கிருந்து மேற்கு நோக்கி பாய்ந்து காம்பே வளைகுடா வழியாக அரபிக்கடலில் கலக்கிறது.

5. இலட்சத்தீவுக் கூட்டங்கள் பற்றி கூறுக.

  • இந்தியாவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள இலட்சத்தீவு முருகைப் பாறைகளால் ஆனது.
  • சுமார் 32 ச.கி.மீ. பரப்பளவு கொண்டது
  • நிர்வாகத் தலைநகரம் காவராத்தி
  • மினிகாய் மற்றும் அபினித்தீவுக் கூட்டங்கள் 1973 முதல் இலட்சத்தீவுகள் என அழைக்கப்படுகிறது.

அலகு-2

இந்தியா- காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள்

1. காலநிலையை பாதிக்கும் காரணிகளை பட்டியலிடுக

  • அட்சம் பரவல்
  • கடலிலிருந்து அமைந்துள்ள தொலைவு
  • கடல் மட்டத்திலிருந்து உயரம்
  • பருவக்காற்று
  • நிலத்தோற்றம்
  • ஜெட்காற்றுகள்

2. வெப்ப குறைவு விகிதம் என்றால் என்ன?

  • புவிபரப்பிருந்து உயரே செல்லச் செல்ல வளிமண்டலத்தின் ஒவ்வொரு 1000 மீட்டர் உயரத்திற்கும் 6.5°c என்ற அளவில் வெப்பநிலை குறையும்.
  • இதற்கு வெப்ப குறைவு விகிதம் என்று பெயர்

3. ஜெட் காற்றோட்டங்கள் என்றால் என்ன?

  • வளிமண்டலத்தின் உயர் அடுக்குகளில் குறுகிய பகுதிகளில் வேகமாக நகரும் காற்றுகள் ஜெட் காற்றுகள் எனப்படும்
  • இக்கோட்பாட்டின் படி உப அயன மேலை காற்றோட்டம் வட பெரும் சமவெளியிருந்து திபெத் பீடபூமியை நோக்கி இடம் பெயர்வதால் தென்மேற்கு பருவக்காற்று உருவாகிறது.
  • கீழை ஜெட் காற்றோட்டங்கள் வெப்ப மண்டல தாழ்வழுத்தங்களை உருவாக்குகின்றன.

4. பருவக்காற்று குறித்து ஒரு சிறுகுறிப்பு வரைக

  • பருவங்களுக்கேற்றவாறு தங்களது திசைகளை மாற்றிக் கொண்டு வீசும் கோள் காற்றுகள் பருவக்காற்று என்கிறோம்.
  • இவை இந்தியாவின் காலநிலையை பாதிக்கும் முக்கிய காரணி
  • இரு வகைப்படும் , வடகிழக்கு பருவக்காற்று,  தென்மேற்கு பருவக்காற்று

5. இந்தியாவின் நான்கு பருவக் காலங்களைக் குறிப்பிடுக

  • குளிர்காலம் – ஜனவரி முதல் பிப்ரவரி வரை
  • கோடைகாலம் – மார்ச் முதல் மே வரை
  • தென்மேற்கு பருவக்காற்று காலம் – ஜீன் முதல் செப்டம்பர்வரை (மழைக்காலம்)
  • வடகிழக்கு பருவக்காற்று காலம் – அக்டோபர் முதல் டிசம்பர் வரை

6. பருவ மழை வெடிப்பு என்றால் என்ன?

  • தென்மேற்கு பருவக்காற்று கேரளாவிலுள்ள மலபார் கடற்கரையை அடையும்போது பலத்த இடிமின்னலுடன் கூடிய மழையை அளிக்கும் இதனை பருவ மழை வெடிப்பு என்பர்
  • இது இந்தியாவின் வெப்பநிலையை பெருமளவில் குறைக்கிறது
  • தென்மேற்கு பருவக்காற்று தொடங்கும் முன் வட இந்தியாவின் வெப்பநிலை 46° வரை உயரும்.

7. அதிக மழைப்பெறும் பகுதிகளைக் குறிப்பிடுக

  • மேற்கு கடற்கரை
  • அசாம்.
  • மேகாலயாவின் தென்பகுதி,
  • திரிபுரா,
  • நாகலாந்து,
  • அருணாச்சல பிரதேசம்
  • இப்பகுதிகள் 200 செ.மீட்டருக்கும் அதிகமான மழைப்பொழிவை பெறுகின்றன.

8.இந்தியாவில் சதுப்பு நில காடுகள் காணப்படும் இடங்களைக் குறிப்பிடுக.

  • சதுப்பு நிலக்காடுகள் டெல்டாக்கள், பொங்கு முகங்கள் மற்றும் கடற்கழி முகப் பகுதிகளில் காணப்படுகின்றன.
  • கங்கை-பிரம்மபுத்திரா டெல்டா பகுதியில் உலகில் மிகப்பெரிய சதுப்புநிலக்காடுகள் உள்ளன.
  • மகாநதி, கோதாவரி மற்றும் கிருஷ்ணா நதிகளின் டெல்டா பகுதிகளிலும் ஓதக்காடுகள் காணப்படுகின்றன.

9. இந்தியாவிலுள்ள உயிர்க்கோள காப்பகங்கள் ஏதேனும் ஐந்தினை எழுதுக

  • நீலகிரி – தமிழ்நாடு
  • மன்னார் வளைகுடா – தமிழ்நாடு
  • அகத்திய மலை – கேரளா
  • கட்ச்  – குஜராத்
  • பெரிய நிக்கோபார் – அந்தமான் நிக்கோபார் தீவுகள்
  • சுந்தரவனம் – மேற்கு வங்காளம்

10. புலிகள் பாதுகாப்புத் திட்டம் என்றால் என்ன?

  • இத்திட்டம் 1973ல் தொடங்கப்பட்டது.
  • புலிகளை பாதுகாக்கவும், அதன் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கத்தோடு தொடங்கப்பட்டது.
  • இத்திட்டம் புலிகளின் எண்ணிக்கையை 60% உயர்த்தி 1979ல் 3015 ஆக உயர்த்தியது.

அலகு-3

வேளாண்மைக் கூறுகள்

1. மண் வரையறு.

  • மண் என்பது கனிமங்களின் கூட்டுப் பொருட்கள், மக்கிய தாவரங்கள், விலங்கினப் பொருட்கள் காற்று மற்றும் நீர் ஆகியவற்றை உள்ளடக்கியது. புவியின் மேற்பரப்பில் காணப்படும் ஒரு அடுக்காகும்
  • பல்வேறு காலநிலை சூழலில் பாறைகள் சிதைவடைவதால் மண் உருவாகிறது

2. இந்தியாவில் காணப்படும் மண் வகைகளின் பெயர்களைப் பட்டியலிடு.

  • வண்டல்மண்
  • கரிசல் மண்
  • செம்மண்
  • சரளை மண்
  • காடு மற்றும் மலை மண்
  • வறண்ட பாலைமண்
  • உப்பு மற்றும் கார மண்
  • களிமண் மற்றும் சதுப்பு நில மண்

3. கரிசல் மண்ணின் ஏதேனும் இரண்டு பண்புகளை எழுதுக

  • ஈரமாக இருக்கும் போது சேறாகவும், ஈரப்பதத்தை நீண்ட நேரம் தக்க வைத்துக் கொள்ளும் தன்மையும் உடையது.
  • தக்காண பகுதியில் உள்ள பசால்ட் பாறைகளில் இருந்து உருவானது
  • டைட்டானியம் மற்றும் இரும்பு தாதுக்களால் கருப்பு நிறமாக உள்ளது.

4. வேளாண்மை வரையறு

  • குறிப்பிட்ட பயிர்களை உற்பத்தி செய்தும், கால்நடைகளை வளர்த்தும் மக்களுக்கு உணவையும் கால்நடைகளுக்கு தீவனத்தையும் நார் மற்றும் இதர பொருட்களை வழங்குவது வேளாண்மையாகும்.
  • இந்தியா வேளாண்மை மூலம் 50% மேல் மக்களுக்கு வேலை வாய்பை தருகிறது.
  • நாட்டின் மொத்த வருமானத்தில் 25% ஐ நாட்டிற்கு அளிக்கிறது.

5. இந்தியாவின் வேளாண்மை முறைகளைக் குறிப்பிடுக

  • தன்னிறைவு வேளாண்மை
  • இடப்பெயர்வு வேளாண்மை
  • தீவிர வேளாண்மை
  • வறண்ட நில வேளாண்மை
  • கலப்பு வேளாண்மை
  • படிகட்டு முறை வேளாண்மை

6. இந்திய வேளாண் பருவங்களைக் குறிப்பிடுக

  • காரிஃப் பருவம் – ஜீன் முதல் செப்டம்பர் வரை
  • ராபி பருவம் – அக்டோபர் முதல் மார்ச் வரை
  • சையத் பருவம் – ஏப்ரல் முதல் ஜூன் வரை

7. இந்தியாவின் தோட்டப்பயிர்களைக் குறிப்பிடுக

  • தேயிலை
  • காபி
  • இரப்பர்
  • வாசனைப் பொருட்கள்

8. கால்நடைகள் என்றால் என்ன?

  • இந்தியாவின் விவசாயத்தோடு ஒருங்கிணைந்த கூறுகள் கால்நடைகள்
  • கால்நடைகளின் பல்வேறு வகை பயண்பாடுகள் காரணமாக பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுகிறது.
  • வேளாண்மை பொய்க்கும் போது வேலைவாய்ப்பையும், வருவாயையும் அளிக்கிறது.
  • நிலத்தை உழவும், பயிர்களுக்கு உரம் அளிக்கவும் பயன்படுகிறது.

9. இந்தியாவில் மீன் வளர்ப்பு பிரிவுகளைப் பற்றி ஒரு சுருக்கமான குறிப்பு தருக

  • கடல் மீன் பிடிப்பு கடற்கரைப்பகுதி, கடற்கைரையை ஒட்டிய பகுதி மற்றும் ஆழ்கடல் முக்கியமானப்பகுதிகளில் 200 மீட்டர் ஆழம் வரை உள்ள கண்டத்திட்டு பகுதிகளில் மீன் பிடித்தல் நடைபெறுகிறது. ( கேரளா- முதலிடம்)
  • உள்நாட்டு மீன் பிடிப்பு நீர்த்தேக்கங்களான ஆறுகள், ஏரிகள், கால்வாய்கள், குளங்கள் மற்றும் கண்மாய்கள் போன்ற நீர்நிலைகளில் நடைபெறும் மீன்பிடித்தல். ( ஆந்திர பிரதேசம் – முதலிடம்)

அலகு -4

வளங்கள் மற்றும் தொழிலகங்கள்

1. வளத்தை வரையறுத்து அதன் வகைகளைக் குறிப்பிடுக.

  • இயற்கையிலிருந்து பெறப்பட்டு உயிரினங்களால் பயன்படுத்தப்படும் அனைத்து வளங்களும் இயற்கை வளம் எனப்படும். (எ.கா) காற்று, நீர், மண், புதை படிம எரிபொருட்கள்
  • தொடர்ந்து கிடைக்கும் தன்மையின் அடிப்படையில் இருவகையாக பிரிக்கலாம்
  • புதுபிக்க இயலும் வளங்கள்,
  • புதுபிக்க இயலாத வளங்கள்.

2. கனிமங்கள் மற்றும் அதன் வகைகள் யாவை?

  • ஒரு குறிபிட்ட வேதியியல் மற்றும் இயற்பியல் பண்புகளைக் கொண்ட உயிருள்ள மற்றும் உயிரற்ற இயற்கை மூலங்கள் கனிமங்கள் ஆகும்.
  • வகைகள்: உலோக கனிமங்கள்  அலோக கனிமங்கள்

3. மெக்னீசியத்தின் (மாங்கனீசு) பயன்களைக் குறிப்பிடுக.

  • இரும்பு எஃகு மற்றும் உலோக கலவை உற்பத்திக்கு அடிப்படை மூலப் பொருள்
  • வெளுக்கும் தாள், பூச்சிக்கொல்லிகள், வண்ணப்பூச்சிகள், மின்கலன்கள் தயாரிக்க பயன்படுகிறது.

4. இயற்கை எரிவாயு என்றால் என்ன?

  • ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் அழிந்து புதையுண்ட தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் அதிக வெப்பம் மற்றும் அழுத்தம் காரணமாக மக்குவது மூலம் உண்டாகும் ஒரு வாயு இயற்கை எரிவாயு.
  • பொதுவாக பெட்ரோலிய பகுதிகளுடன் இணைந்து காணப்படும்
  • இயற்கையாக உருவாகும் ஒரு நீர்ம கரிம வாயு, பெரும்பகுதி மீத்தேன் வாயுவாக இருக்கும்.

5. நிலக்கரியின் வகைகளை அதன் கரிம அளவுகளுடன் குறிப்பிடுக.    

          நிலக்கரியின் வகைகள்                             கரிம அளவுகள்

  • ஆந்தரசைட்                                               80 முதல் 90 சதவீதம்
  • பிட்டுமினஸ்                                              60 முதல் 80 சதவீதம்
  • பழுப்பு நிலக்கரி                                         40 முதல் 60 சதவீதம்
  • மரக்கரி                                                      40 சதவீதத்திற்கும் குறைவு

6. இந்தியாவில் சணல் உற்பத்தி செய்யும் முக்கிய பகுதிகளைக் குறிப்பிடுக

  • மேற்கு வங்கத்தில் உள்ள ஹூக்ளி ஆற்றங்கரை நெடுகிலும் அமைந்துள்ளது
  • டிட்டகார், ஜகட்டட் பட்ஜ்-பட்ஜ், ஹவுரா ஆகியன முதன்மை சணல் உற்பத்தி பகுதிகள்
  • மேற்கு வங்காளம், ஆந்திர பிரதேசம், உத்திர பிரதேசம், சத்தீஸ்கர், பீகார், அசாம், ஒடிசா சணல் உற்பத்தி செய்யும் மாநிலங்கள்.

7. இந்தியாவின் முக்கிய எண்ணெய் உற்பத்திப் பகுதிகளைக் குறிப்பிடுக

  • மேற்கு கடற்கரைக்கு அருகில்;
  • மும்பை ஹை எண்ணெய் வயல்
  • குஜராத் கடற்கரை
  • அங்கலேஸ்வர்
  • காம்பே
  • கிழக்கு கடற்கரைக்கு அருகில்;
  • பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு
  • திக்பாய் எண்ணெய் வயல்
  • ருத்ரசாகர்-லாவா
  • அந்தமான் நிக்கோபார் உட்பகுதி

அலகு : 5

இந்தியா- மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம்

1. இடம் பெயர்வு என்றால் என்ன? அதன் வகைகளைக் குறிப்பிடுக.

  • ஒரு பகுதியிருந்து மற்றொரு பகுதிக்கு மக்கள் இடம் பெயர்ந்து செல்வது இடம் பெயர்வு எனப்படும்.
  • வகைகள்;
  • உள்நாட்டு இடப்பெயர்வு-ஒரு நாட்டின் எல்லைக்குள் நடைபெறுவது.
  • சர்வதேச இடப்பெயர்வு-நாடுகளுக்கிடையே நடைபெறுவது.

2. இரயில் போக்குவரத்தின் நன்மைகள் ஏதேனும் நான்கினை எழுதுக.

  • இந்திய தரை வழிப் போக்குவரத்து அமைப்பின் முதுகெலும்பாக கருதப்படுகிறது..
  • அதிக அளவு பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்தின் தேவையை பூர்த்தி செய்கிறது.
  • வணிகம், சுற்றுளா, கல்வி போன்றவற்றை ஊக்குவிக்கிறது.
  • பொருளாதார வளர்ச்சிக்கும், தேசிய ஒருமைப்பாடு வளரவும் உதவுகிறது
  • மூலப்பொருள் மற்றும் முடிவுற்ற பொருட்களை எடுத்துச் செல்ல பயன்படுகிறது.

3. நம் நாட்டின் குழாய் போக்குவரத்து அமைப்பு பற்றி ஒரு குறிப்பு வரைக

  • எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வயல்களையும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களையும் அதன் சந்தை பகு திக ளோடு இணைக்கும் எளிதான மற்றும் சிறந்த போக்குவரத்தாகும்.
  • குழாய் போக்குவரத்து அமைக்க ஆரம்பகால செலவு அதிகம், ஆனால் பராமரிப்பு செலவு குறைவு
  • (எ.கா) அசாம்-கான்பூர், சலாயா-ஜலந்தர்

4. இந்தியாவின் முக்கிய உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்துகளைக் குறிப்பிடுக

  • தேசிய நீர்வழிப் போக்குவரத்து எண்-1
  • இது ஹால்தியா மற்றும் அலகாபாத், கங்கை – ஹூக்ளி ஆறுகளுடன் இணைந்து செயல்படுகிறது (1620 கி.மீ)
  • தேசிய நீர்வழிப் போக்குவரத்து எண்-2
  • இது துபரி மற்றும் காடியா, பிரம்மபுத்திரா ஆற்றில் (891 கி.மீ)
  • தேசிய நீர்வழிப் போக்குவரத்து எண்-3 (இந்தியாவில் முதலாவது)
  • இது கொல்லம் மற்றும் கோட்டபுரம், கேரளா (205 கி.மீ)

5. தகவல் தொடர்பு என்றால் என்ன? அதன் வகைகள் யாவை?

  • தகவல்கள், எண்ணங்கள் மற்றும் கருத்துக்களின் தொழில் நுட்ப பரிமாற்றமே தகவல் தொடர்பு என்கிறோம்
  • தகவல் தொடர்புகள் இரு பிரிவுகளாக உள்ளது
  • தனிமனித தகவல் தொடர்பு
  • பொதுத் தகவல் தொடர்பு
  • தகவல் தொழில் நுட்பத் துறையில் தொழில்நுட்பம் வியக்கத்தக்க வகையில் உள்ளது.

6. பன்னாட்டு வணிகம் – வரையறு.

  • இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகளிடையே நடைபெறும் வணிகம் பன்னாட்டு வணிகம்
  • ஏற்றுமதி மற்றும் இறக்குமதி இதன் இருகூறுகள் ஆகும்
  • நீர்வழி மற்றும் வான்வழி போக்குவரத்து இதில் முக்கிய பங்கு வகிக்கிறது
  • இதில் அந்நியநாட்டு பணம் பயன்படுத்தப்படுகிறது.

7. சாலை போக்குவரத்தின் சாதக அம்சங்களைக் குறிப்பிடுக

  • குறுகிய தூர பயணத்திற்கு மிகவும் உகந்தது.
  • சாலைகளை அமைப்பது, பராமரிப்பு செய்வது மற்ற போக்குவரத்து முறைகளை விட மலிவானது.
  • சமுதாயத்தின் அனைத்து பிரிவு மக்களாலும் பயன்படுத்தக்கூடிய மலிவான போக்குவரத்து
  • இதன்மூலம் பண்ணைகள், தொழிற்சாலைகள் மற்றும் சந்தைகள் ஆகியவற்றுடன் எளிதில் தொடர்பு கொள்ளலாம்

அலகு – 6

தமிழ்நாடு – இயற்கைப் பிரிவுகள்

1. தமிழ்நாட்டின் எல்லைகளைக் குறிப்பிடுக

  • கிழக்கு – வங்காள விரிகுடா
  • மேற்கு – கேரளா
  • வடக்கு – ஆந்திர பிரதேசம்
  • வடமேற்கு – கர்நாடகா
  • தெற்கு – இந்தியப் பெருங்கடல்
  • 2. தேரி என்றால் என்ன? இராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கடற்கரையோரங்களில் உருவாக்கப்பட்ட மணல் குன்றுகள் தேரி எனப்படும்

3. கடற்கரை சமவெளி எவ்வாறு உருவாகிறது?

  • இச்சமவெளி கிழக்கு நோக்கி பாய்ந்து வங்காள விரிகுடாவில் கலக்கும் ஆறுகளால் உருவாகிறது.
  • சில இடங்களில் 80 கி.மீ அதிகமான அகலத்துடன் காணப்படுகிறது.

4. தமிழ்நாட்டின் முக்கியத் தீவுகளை குறிப்பிடுக

  • பாம்பன்.
  • முயல்தீவு,
  • குருசடை,
  • நல்லதண்ணி தீவு
  • புள்ளிவாசல்,
  • ஸ்ரீரங்கம்,
  • உப்புதண்ணித்தீவு,
  • தீவுத்திடல்,
  • காட்டுப்பள்ளித்தீவு,
  • குவிப்பில்தீவு
  • விவேகானந்தர் நினைவுப்பாறை

5. தாமிரபரணி ஆற்றின் துணை ஆறுகளின் பெயர்களை எழுதுக.

  • கரையாறு
  • சேர்வலாறு
  • மணிமுத்தாறு
  • சித்தாறு
  • பச்சையாறு
  • கடனா நதி
  • ராமநதி

6. பேரிடர் அபாய நேர்வு- வரையறு

  • ஐ.நாவின் UNDRR கூற்றின் படி, பேரிடருக்கான காரணங்களை முறையாகக் கண்டறிந்து பேரிடரின் போது அதன் தாக்கங்களைக் குறைப்பதாகும்.
  • 7. புயலின் போது வானிலை மையம் மீனவர்களை எவ்வாறு எச்சரிக்கிறது. கைபேசி மூலமாகவும், வானொலி, தொலைக்காட்சி, செய்தித்தாள்கள் மூலமும் மீனவர்களை எச்சரிக்கிறது.
  • மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்த்தும், படகுகளை பாதுகாக்கவும் கூறுகிறது.

அலகு-7

தமிழ்நாடு – மானுடப் புவியியல்

1.தமிழ்நாட்டின் வேளாண் பருவகாலங்களை எழுதுக.

  • பருவம்                          விதைக்கும் காலம்                  அறுவடைகாலம்
  • சொர்ணவாரி                 ஏப்ரல் – மே                           ஆகஸ்டு – செப்டம்பர்
  • (சித்திரை பட்டம்)
  • சம்பா (ஆடிபட்டம்)     ஜூலை- ஆகஸ்டு                  ஜனவரி – பிப்ரவரி
  • நவரை                          நவம்பர் – டிசம்பர்                   பிப்ரவரி – மார்ச்

2. கோயம்புத்தூர் ஏன் தமிழ்நாட்டின் மான்செஸ்டர் என அழைக்கப்படுகிறது.

  • கோயம்புத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் (ஈரோடு, திருப்பூர்) ஏராளமான பருத்தி நெசவாலைகள் அமைந்துள்ளதால் கோயம்புத்தூர் தமிழ்நாட்டின் மான்செஸ்டர் என அழைக்கப்படுகிறது.
  • கோயம்புத்தூர் நெசவுத் தொழில் மூலம் மாநில பொருளாதாரத்திற்கு முக்கிய பங்களிக்கிறது.

3. தமிழ்நாட்டின் முக்கிய பல்நோக்குத் திட்டங்களின் பெயர்களை எழுதுக.

  • மேட்டூர் அணை
  • பவானிசாகர் அணை
  • அமராவதி அணை
  • சாத்தனூர் அணை
  • பாபநாசம் அணை

4. பறக்கும் தொடருந்துத் திட்டம் (MRTS) என்றால் என்ன?

  • இத்திட்டம் சென்னையிலும், புறநகரிலும் நன்கு வளர்ச்சியடைந்துள்ளது.
  • மே 2017 முதல் மெட்ரோ இரயில் அமைப்பும், பாதாள இரயில் போக்குவரத்துடன் விரிவு செய்துள்ளது.

5. தமிழ்நாட்டின் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களைப் பட்டியலிடுக.

  • விமான நிலையங்கள்:
  • சென்னை
  • தூத்துக்குடி
  • மதுரை
  • சேலம்
  • திருச்சி
  • கோவை துறைமுகங்கள் :
  • சென்னை
  • தூத்துக்குடி
  • எண்ணூர்
  • நாகை

DOWNLOAD PDF – Click Here

Leave a Comment