6- ஆம் வகுப்பு – தமிழ் – பாடக்குறிப்பு – ஜுலை ,இரண்டாவது வாரம் (11.07.22 முதல் 15.07.22 வரை )
தலைப்பு : தமிழ் எழுத்துகளின் வகை தொகை
பாடத்தின் தன்மை :
- தமிழில் உள்ள எழுத்துகளின் வகை தொகை பற்றிய பல்வேறு செய்திகளை விளக்குவதால், மரக்கிளை வகையைச் சார்ந்தது.
கற்கும் முறை :
- எழுத்துகளின் வகை தொகை கருத்துகளைக் குழுவாக்கப் படித்து, அறிந்து மாணவர்கள், குழுவாகக் கற்றல்,
துணைக் கருவிகள் :
- வரைபடம்
- மின்னட்டைகள்
- பொருத்தட்டை
பாட அறிமுகம் :
- எழுத்து என்றால் என்ன ? என்ற வினாவினை மாணாக்கர்களிடம் கேட்டு, அவ்விடைகளின் வழியே பாட அறிமுகம் செய்தல்.
வாசித்தல் :
- ஆசிரியர் வாசித்துக் காட்ட மாணாக்கர்கள் தனித் தனியே வாசித்தல் மேற்கொள்ளுதல்,
கற்றல் திறன்கள் :
- புதிய சொற்களை அடிக்கோடிடல்
- அகராதி கொண்டு பொருள் அறிந்து எழுதுதல்
- சான்றுகள் அறிதல்
மனவரைபடம் :

தொகுத்தல் :
- உயிர் எழுத்து – 12
- மெயயெழுத்து – 18
- உயிர்மெய் – 216
- ஆய்த எழுத்து – 1
- மொத்தம் – 247 கண்ணிமைக்கும் நேரமும் இயல்பாக கைநொடிக்கும் நேரமும் மாத்திரை எனப்படும்.
வழங்குதல் :
- மனவரைபடக் கருத்துகளை குழுவினில் வழங்கி , ஒட்டு மொத்த தொகுத்தல் செய்தல்.
வலுவூட்டல் :
- மடிகணினி மூலம் இலக்கணச் சிறப்புகளைப் பாடலாகக் காட்டி, பாடத்தை வலுவூட்டுதல்.
மதிப்பீடு :
- மாணாக்கர் திறன் அறிய எளிமையான சில வினாக்கள் கேட்டல். வினாக்கள்:
- உயிரெழுத்துகள் யாவை?
- உயிர்மெய் எழுத்து மொத்தம் எத்தனை?
- மாத்திரை என்றால் என்ன?
குறைதீர் கற்பித்தல் :
- மெல்ல அரும்பும் மாணாக்கர்களுக்குத் தமிழ் எழுத்துகளின் வகைகளை மீண்டும் கற்பித்துத் தனியே பயிற்சி அளித்தல்.
எழுதுதல் :
- சொல்வதை எழுதுதல், பாடநூல் மதிப்பீட்டு வினாக்கள் எழுதுதல்,
கற்றல் விளைவுகள் :
- தமிழ் எழுத்துகளின் வகைகளை மாணவர்கள் அறிந்துகொண்டனர்.
தொடர்பணி :
- உயிர்மெய் எழுத்துகளின் பட்டியலை எழுதி வரச் சொல்லுதல்,