6 ஆம் வகுப்பு – தமிழ்
பாடதிட்டக் குறிப்பேடு
(26.06.23 TO 30.06.2023) – ஜூன் நான்காம் வாரம்
கவிதைப் பேழை
தமிழ்க்கும்மி
பெருஞ்சித்திரனார்
பாடத்தின் தன்மை :
- தமிழின் சிறப்பினை மட்டும் விளக்குவதால், தனித்தவகையைச் சார்ந்தது.
கற்கும் முறை :
- ஆசிரியர் பாடலைப் பாட அதனைக் கேட்டு மாணவர்கள், தானே கற்றல்.
துணைக் கருவிகள்
- பெருஞ்சித்திரனார் கவிதைகள் – நூல்
- விளக்கப்படம்
- ஒலிபெருக்கி
பாட அறிமுகம்
- பெருஞ்சித்திரனார் குறித்து நீவிர் அறிந்த செய்தியைக் கூறுக? என்ற வினாவினை மாணாக்கர்களிடம் கேட்டு, அவ்விடைகளின் வழியே பாட அறிமுகம் செய்தல்.
வாசித்தல்
- நூல்வெளிப் பகுதியினை ஆசிரியர் வாசித்துக் காட்ட மாணாக்கர்கள் தனித் தனியே வாசித்தல் மேற்கொள்ளுதல்.
கற்றல் திறன்கள்
- புதிய சொற்களை அடிக்கோடிடல்
- அகராதி கொண்டு பொருள் அறிந்து எழுதுதல்
மனவரைபடம்

தொகுத்தல்
- தமிழ் புகழ் எட்டுத்திசை பரவட்டும். பல நூறு ஆண்டுகள் கண்டது நம் மொழி. அறிவுற்று நூல்கள் பலவற்றைக் கொண்டது.
- இயற்கைச் சீற்றம் வந்தாலும் அழியாத மொழி, பொய்யை அகற்றும் மொழி. அறியாமை நீக்கும், இன்பப் பாடல் கொண்டது நம் மொழி.
- உயிர் போல் உண்மை ஊட்டும் மொழி. வாழ வழி காட்டும்,
- உயர்ந்த அறம் நல்கும் மொழி தமிழ் மொழி.
வழங்குதல்
- மனவரைபடக் கருத்துகளை குழுவினில் வழங்கி , ஒட்டு மொத்த தொகுத்தல் செய்தல்.
வலுவூட்டல்
- மடிகணினி மூலம் பாடல் காட்சிகளைக் காட்டி, பாடத்தை வலுவூட்டுதல்.
மதிப்பீடு
- மாணாக்கர் திறன் அறிய எளிமையான சில வினாக்கள் கேட்டல்.
வினாக்கள்:
- எட்டுத் திசைக்கும் புகழ் பரவும் மொழி எது?
- இயற்கைச் சீற்றத்தால் அழியாத மொழி எது?
- எதன் அறியாமையைத் தமிழ்மொழி நீக்கும்?
குறைதீர் கற்பித்தல்
- மெல்ல அரும்பும் மாணாக்கர்களுக்கு பாடலையும் பொருளினையும் கற்பித்துத் தனியே பயிற்சி அளித்தல்.
எழுதுதல்
- சொல்வதை எழுதுதல், பாடநூல் மதிப்பீட்டு வினாக்கள் எழுதுதல். .
கற்றல் விளைவுகள்
- பெருஞ்சித்திரனாரின் பாடல் வழி தமிழின் புகழை மாணவர்கள் அறிந்து கொண்டனர்.
தொடர்பணி
- பெருஞ்சித்திரனாரின் படைப்புகளைப் பட்டியலிட்டு வரச்சொல்லுதல்,
- பெருஞ்சித்திரனாரின் பிற கவிதைகளை அறிந்து எழுதி வரச் சொல்லுதல்.