6 TAMIL LESSON PLAN – JUNE 4 TH WEEK (26.06.23 TO 30.06.2023)

6 ஆம் வகுப்பு – தமிழ்

பாடதிட்டக்  குறிப்பேடு

(26.06.23 TO 30.06.2023) – ஜூன் நான்காம் வாரம்

கவிதைப் பேழை

தமிழ்க்கும்மி

பெருஞ்சித்திரனார்

பாடத்தின் தன்மை :

  • தமிழின் சிறப்பினை மட்டும் விளக்குவதால், தனித்தவகையைச் சார்ந்தது.

கற்கும் முறை :

  • ஆசிரியர் பாடலைப் பாட அதனைக் கேட்டு மாணவர்கள், தானே கற்றல்.

துணைக் கருவிகள்

  • பெருஞ்சித்திரனார் கவிதைகள் – நூல்
  • விளக்கப்படம்
  • ஒலிபெருக்கி

பாட அறிமுகம்

  • பெருஞ்சித்திரனார் குறித்து நீவிர் அறிந்த செய்தியைக் கூறுக? என்ற வினாவினை மாணாக்கர்களிடம் கேட்டு, அவ்விடைகளின் வழியே பாட அறிமுகம் செய்தல்.

வாசித்தல்

  • நூல்வெளிப் பகுதியினை ஆசிரியர் வாசித்துக் காட்ட மாணாக்கர்கள் தனித் தனியே வாசித்தல் மேற்கொள்ளுதல்.

கற்றல் திறன்கள்

  • புதிய சொற்களை அடிக்கோடிடல்
  • அகராதி கொண்டு பொருள் அறிந்து எழுதுதல்

மனவரைபடம்

தொகுத்தல்

  • தமிழ் புகழ் எட்டுத்திசை பரவட்டும். பல நூறு ஆண்டுகள் கண்டது நம் மொழி. அறிவுற்று நூல்கள் பலவற்றைக் கொண்டது.
  • இயற்கைச் சீற்றம் வந்தாலும் அழியாத மொழி, பொய்யை அகற்றும் மொழி. அறியாமை நீக்கும், இன்பப் பாடல் கொண்டது நம் மொழி.
  • உயிர் போல் உண்மை ஊட்டும் மொழி. வாழ வழி காட்டும்,
  • உயர்ந்த அறம் நல்கும் மொழி தமிழ் மொழி.

வழங்குதல்

  • மனவரைபடக் கருத்துகளை குழுவினில் வழங்கி , ஒட்டு மொத்த தொகுத்தல் செய்தல்.

வலுவூட்டல்

  • மடிகணினி மூலம் பாடல் காட்சிகளைக் காட்டி, பாடத்தை வலுவூட்டுதல்.

மதிப்பீடு

  • மாணாக்கர் திறன் அறிய எளிமையான சில வினாக்கள் கேட்டல்.

வினாக்கள்:

  • எட்டுத் திசைக்கும் புகழ் பரவும் மொழி எது?
  • இயற்கைச் சீற்றத்தால் அழியாத மொழி எது?
  • எதன் அறியாமையைத் தமிழ்மொழி நீக்கும்?

குறைதீர் கற்பித்தல்

  • மெல்ல அரும்பும் மாணாக்கர்களுக்கு பாடலையும் பொருளினையும் கற்பித்துத் தனியே பயிற்சி அளித்தல்.

எழுதுதல்

  • சொல்வதை எழுதுதல், பாடநூல் மதிப்பீட்டு வினாக்கள் எழுதுதல். .

கற்றல் விளைவுகள்

  • பெருஞ்சித்திரனாரின் பாடல் வழி தமிழின் புகழை மாணவர்கள் அறிந்து கொண்டனர்.

தொடர்பணி

  • பெருஞ்சித்திரனாரின் படைப்புகளைப் பட்டியலிட்டு வரச்சொல்லுதல்,
  • பெருஞ்சித்திரனாரின் பிற கவிதைகளை அறிந்து எழுதி வரச் சொல்லுதல்.

Leave a Comment