7 ஆம் வகுப்பு – தமிழ்
பாடதிட்டக் குறிப்பேடு
(26.06.23 TO 30.06.2023) – ஜூன் நான்காம் வாரம்
கவிதைப் பேழை
ஒன்றல்ல இரண்டல்ல – உடுமலை நாராயண கவி
பாடத்தின் தன்மை :
- தமிழ் நாட்டின் பெருமையினை மட்டும் விளக்குவதால், தனித்தவகையைச் சார்ந்தது.
கற்கும் முறை :
- ஆசிரியர் பாடலைப் பாட அதனைக் கேட்டு மாணவர்கள், தானே கற்றல்.
துணைக் கருவிகள்
- உடுமலை நாராயண கவி கவிதைகள் – நூல்
- விளக்கப்படம்
- மின்னட்டை
பாட அறிமுகம்
- உடுமலை நாராயண கவி குறித்து நீவிர் அறிந்த செய்தியைக் கூறுக? என்ற வினாவினை மாணாக்கர்களிடம் கேட்டு , அவ்விடைகளின் வழியே பாட அறிமுகம் செய்தல்.
வாசித்தல்
- நூல்வெளிப் பகுதியினை ஆசிரியர் வாசித்துக் காட்ட மாணாக்கர்கள் தனித் தனியே வாசித்தல் மேற்கொள்ளுதல்.
கற்றல் திறன்கள்
- புதிய சொற்களை அடிக்கோடிடல்
- அகராதி கொண்டு பொருள் அறிந்து எழுதுதல்
மனவரைபடம்

தொகுத்தல்
- தமிழ்நாட்டில் வீசும் தென்றலில் தேன் மணம் கமழும்.
- சுவைமிகுந்த பழங்களும் தங்கம் போன்ற தானியக் கதிர்களும் விளையும். தமிழ்நாட்டின் நன்செய் நிலவளம் ஒன்றிரண்டல்ல பலவாகும்.
- முல்லைக்குத் தேர் தந்த வள்ளல் வேள்பாரி,
- புலவரின் சொல்லுக்குத் தன் தலையையே தரத் துணிந்தவன் குமண வள்ளல் என வள்ளல்கள் பலர்
- பகைவரை வென்று பாடுவது பரணி இலக்கியம்.
- பரிபாடல்,கலம்பக நூல்கள், எட்டுத்தொகை, திருக்குறள், சங்க இலக்கியங்கள் ஆகியன தமிழுக்கு வளம் சேர்க்கும் இலக்கிய வகைகளாகக் கவிஞர் கூறுகிறார்.
வழங்குதல்
- மனவரைபடக் கருத்துகளை குழுவினில் வழங்கி , ஒட்டு மொத்த தொகுத்தல் செய்தல்.
வலுவூட்டல்
- மடிகணினி மூலம் பாடல் காட்சிகளைக் காட்டி , பாடத்தை வலுவூட்டுதல்.
மதிப்பீடு
- மாணாக்கர் திறன் அறிய எளிமையான சில வினாக்கள் கேட்டல். வினாக்கள்:
- தேன் மணம் எங்கு கமழும்?
- தமிழ்நாட்டில் விளைவன யாவை?
- பகைவரை வென்று பாடுவது எது?
குறைதீர் கற்பித்தல்
- மெல்ல அரும்பும் மாணாக்கர்களுக்கு பாடலையும் பொருளினையும் கற்பித்துத் தனியே பயிற்சி அளித்தல்.
எழுதுதல்
- சொல்வதை எழுதுதல் ,
- பாடநூல் மதிப்பீட்டு வினாக்கள் எழுதுதல்.
கற்றல் விளைவுகள்
- உடுமலை நாராயண கவி பாடல் வழி தமிழ்நாட்டின் புகழை மாணவர்கள் அறிந்து கொண்டனர்.
தொடர்பணி
- உடுமலை நாராயண கவி பிற கவிதைகளை அறிந்து எழுதி வரச் சொல்லுதல்.
- குறுவிடைகளைப் படித்துவரச் சொல்லல்.