8 STD TAMIL LESSON PLAN – JULY 1 ST WEEK (04.07.22 TO 08.07.2022)

8 – ஆம் வகுப்பு – தமிழ் –  பாடக்குறிப்பு – ஜுலை முதல் வாரம் (04.07.22 முதல் 8.07.22 வரை ) 

இயல் – 1 தலைப்பு

  1. தமிழ் வரிவடிவ வளர்ச்சி
  2. சொற்பூக்கள்

பாடத்தின் தன்மை :

  • தமிழ் வரிவடிவ வளர்ச்சி பற்றிய பல்வேறு செய்திகளை விளக்குவதால், மைசிந்தும் வகையைச் சார்ந்தது.
  • பழந்தமிழர்கள் பயன்படுத்திய அருந்தமிழ்ச் சொற்கள் பற்றிய பல்வேறு செய்திகளை விளக்குவதால், மைசிந்தும் வகையைச் சார்ந்தது.

கற்கும் முறை :

  • உரைப்பத்தியைக் குழுவாகப் படித்து, அறிந்து மாணவர்கள், குழுவாகக் கற்றல்.
  • சொற்பூங்காக் கருத்துகளைக் குழுவாககப் படித்து, அறிந்து மாணவர்கள், குழுவாகக் கற்றல்.

துணைக் கருவிகள் :

  • மொழி வரலாறு – நூல்
  • விளக்கப்படம்
  • மின்னட்டைகள்
  • மடிகணினி
  • காட்சிப்படம்
  • மின்னட்டைகள்
  • பொருத்தட்டை

பாட அறிமுகம் :

  • கல்வெட்டு குறித்து நீவிர் அறிந்த செய்தியைக் கூறுக? என்ற வினாவினை மாணாக்கர்களிடம் கேட்டு , அவ்விடைகளின் வழியே பாட அறிமுகம் செய்தல்.
  • பூங்கா என்பது குறித்து நீவிர் அறிந்த செய்தியைக் கூறுக? என்ற வினாவினை மாணாக்கர்களிடம் கேட்டு, அவ்விடைகளின் வழியே பாட அறிமுகம் செய்தல்,

வாசித்தல் :

  • உரைப் பகுதியினை ஆசிரியர் வாசித்துக் காட்ட மாணாக்கர்கள் தனித் தனியே வாசித்தல் மேற்கொள்ளுதல்,
  • சொற்பூங்கா சுருக்கத்தினை ஆசிரியர் வாசித்துக் காட்ட மாணாக்கர்கள் தனித் தனியே வாசித்தல் மேற்கொள்ளுதல்,

கற்றல் திறன்கள் :

  • புதிய சொற்களை அடிக்கோடிடல்
  • அகராதி கொண்டு பொருள் அறிந்து எழுதுதல்
  • மையக்கருத்தை அறிதல்
  • உரக்கப் படித்தல்
  • புதிய சொற்களை அடிக்கோடிடல்
  • அகராதி கொண்டு பொருள் அறிந்து எழுதுதல்
  • மையக்கருத்தை அறிதல்

மனவரைபடம் தமிழ் வரிவடிவ வளர்ச்சி

மனவரைபடம் சொற்பூக்கள்

தொகுத்தல் தமிழ் வரிவடிவ வளர்ச்சி

  • தொடக்க காலத்தில் எழுத்து ஒலி,வடிவம் குறிக்காது ஓவிய வடிவமாகவே இருந்தது.
  • ஓர் ஒலிக்கு ஓர் எழுத்து என உருவான நிலை ஒலி எழுத்து நிலை என்பர். பழைய வரி வடிவங்களைக் கோயில் செப்பேடுகள் மற்றும் கருங்கல் சுவர்களில் காணலாம்.
  • வரிவடிவங்களை வட்டெழுத்து,தமிழெழுத்து என்று இரு வகையாகப் பகுக்கலாம்.
  • சுவடி , கல்வெட்டு ஆகியவற்றில் , எழுத்தில் புள்ளியிட்டால் எழுத்து சிதையும் எனவே , எழுத்துகள் புள்ளியிடாது எழுதல் வழக்கமானது.
  • காலம் மற்றும் அறிவியல் சாதனங்களின் வளர்ச்சியால் எழுத்துச் சீர்திருத்தம் வேண்டியதாயிற்று.
  • வீரமாமுனிவர், பெரியார் ஆகியோர் எழுத்துச் சீர்திருத்தம் மேற்கொண்டனர்.

தொகுத்தல் சொற்பூக்கள்

  • ஓரெழுத்தொருமொழி :
  • உயிர் வரிசை :6
  • ம வரிசை :6
  • த,ப,ந வரிசை : ஐந்து ஐந்து(15)
  • க,ச,வ வரிசை : நான்கு நான்கு(12)
  • ய வரிசை:1
  • நொ,து குறில் :2
  • மொத்தம் : 42 எழுத்துகள்
  • யா – யாது, யாவர், யாவள்,
  • யாங்கு,யாண்டு, யார், யாவை
  • மா – மாநாடு,மாநிலம்,
  • மாஞாலம்,மாநிறம்,
  • ஈ – ஒலிக்குறிப்பு , மாட்டு ஈ, தேன் ஈ, ஈக, ஈ.
  • போ,வா,நீ,சூ, சே,சை,சோ  – இக்காலத்தில் வழங்கும் சொற்கள்.
  • ஆன் -ஆ , மான் – மா , கோன் – கோ , தேன் – தே, பேய் – பே ஆகியது.
  • எட்டத்தில் போகின்றவனை ஏய் என்று அழைத்தல் , ஏய் – கூடு , பொருத்து , சேர் பொருள். ஏ – ஏவும் அம்பு,
  • கடமை புரிபவன் ஏவலன், அம்பு விடும் கலை ஏகலை, அதில் வல்லவன் ஏவலன்.

வழங்குதல் தமிழ் வரிவடிவ வளர்ச்சி

  • மனவரைபடக் கருத்துகளை குழுவினில் வழங்கி, ஒட்டு மொத்த தொகுத்தல் செய்தல்.

வழங்குதல் சொற்பூக்கள்

  • மனவரைபடக் கருத்துகளை குழுவினில் வழங்கி, ஒட்டு மொத்த தொகுத்தல் செய்தல்.

வலுவூட்டல் :

  • மடிகணினி மூலம் மொழியின் கூறுகளைக் காட்டி , பாடத்தை வலுவூட்டுதல்,

மதிப்பீடு :

  • மாணாக்கர் திறன் அறிய எளிமையான சில வினாக்கள் கேட்டல்
  • வினாக்கள் : தமிழ் வரிவடிவ வளர்ச்சி
  • ஓவிய எழுத்து என்றால் என்ன?
  • ஒலி எழுத்து நிலை என்பது யாது?
  • வரிவடிவ வகை யாது?

வினாக்கள் : சொற்பூக்கள்

  • கல்லில் தேய்மானம் போல் —— லிலும் தேய்மானம் உண்டு,
  • மா என்ற ஓரெழுத்தொரு மொழிச் சொல் மாற்றம் குறித்து எழுதுக,
  • ஒலிக்குறிப்பைக் காட்டி நிற்கும் சொல் எது?

குறைதீர் கற்பித்தல் :

  • மெல்ல அரும்பும் மாணாக்கர்களுக்கு கூடுதல் வாசித்தல் பயிற்சியினையும் பாடப்பொருளினையும் மீண்டும் கற்பித்துத் தனியே பயிற்சி அளித்தல்.

எழுதுதல் :

  • சொல்வதை எழுதுதல் ,
  • பாடநூல் மதிப்பீட்டு வினாக்கள் எழுதுதல்,

கற்றல் விளைவுகள் :

  • தமிழில் ஏற்பட்ட வரிவடிவ வளர்ச்சி குறித்து மாணவர்கள் அறிந்து கொண்டனர்.
  • பழந்தமிழர்கள் பயன்படுத்திய அருந்தமிழ்ச் சொற்கள் பற்றிய பல்வேறு செய்திகளை அறிதல்

தொடர்பணி :

  • குறு வினா மற்றும் சிறு வினா விடைகளைப் படித்து வரச் சொல்லல்.

Leave a Comment