9 STD TAMIL LESSON PLAN FOR AUGUST 1ST WEEK (01.08.22 TO 05.08.22)

9 STD TAMIL LESSON PLAN FOR AUGUST 1ST WEEK (01.08.22 TO 05.08.22)

தலைப்பு :

  • தண்ணீர்
  • துனை வினைகள்  

நோக்கம் :

  • கந்தர்வன் அடுதிய தண்ணீர்’ சிறுகதையின் வழி நீரின் இன்றியமையாமையை உணர்தல்.
  • மாணவர்கள் துணை வினைகள் குறித்து அறிந்து கொள்ளல்,

உணர்தல் :

  • நீரைச் சேமிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை அறிதல்
  • தற்காலத் தமிழில் ஆம், ஆயிற்று. காட்டு போன்ற சொற்கள் துணைவினைகளாக வழங்கப்படுகின்றன.

பாட அறிமுகம்:

  • உங்கள் பகுதிகளில் தண்ணீர் செழிப்பாக வக்கிறதா ?’ என்று மாணவர்களிடம் கேட்டல்,
  • பணம் இருக்கிறது – போயிருக்கிறேன் – இவற்றில் கரு எனும் சொல்லின் பொருள் குறித்து வினவுதல்.

விதைநெல் :

  • கந்தர்வன் எழுதியுள்ள சிறுகதை ,
  • துனைவினை – கூட்டு வினை பற்றிக் கூறித் துணை வினையின் பொருள் கொள்ளும் முறை பயன்பாடு குறித்து விளக்குதல்

விதைத்தல் : தண்ணீர்

  • ராமநாதபுரம் மாவட்டத்தில் தண்ணீரின்றித் தவிக்கும் சிற்றூரின் நிலை – தொடரியின் வருகை – ஊர் மக்கள் தொடரியில் தண்ணீர் பிடிக்க ஒருதல் – இந்திரா குடம் எடுத்துச் செல்லல் – ஊரில் நிலவும் நீர்த் தட்டுப்பாடு- இந்திராவின் கனவு – இந்திரா இறங்க முடியாமல் தொடர் வண்டியில் செல்லல் -பெற்றோர் உறவினர் தேடுதல் – இந்திரா தண்ணீர் குடத்துடன் வருதல் என விவரித்தல்.

விதைத்தல் : துனை வினைகள் 

  • தனி விளையடிகள் கொண்ட வினைச் சொற்கள் – தனி வினை – படி, படிக்கிறேன்.
  • கூட்டு வினையடிகள் கொண்ட வினைச்சொற்கள் கூட்டுவினை – தந்தியடித்தான், கண்டு பிடித்தான்
  • முதல் உறுப்பாய் வந்து தன் அடிப்படைப் பொருள் தருவது முதல்வினை. முதல் வினைக்குத் ‘துணையாய் வேறு இலக்கணப் பொருள் தருவது துனை வினை
  • பார்த்தேன் – முதல் வினை – பார்த்தல் எனும் அடிப்படைப்பொருள் ஓடப் பார்த்தேன் , துனை வினை, இதில் பார்த்தல் எனும் பொருள் தராமல் முயற்சி செய்தேன்’ எனும், பொருளைத் தருகிறது.

கருத்துப் புனைவு : தண்ணீர்

கருத்துப் புனைவு : துனை வினைகள் 

கருத்துத்தூவானம்  : தண்ணீர்

  • நீரின்றித் தவிக்கும் சிற்றூரின் நிலை – தொடரியில் தண்ணீர் பிடிக்கும் அவலம் , பற்றி தொகுத்துரைத்தல் – மாணவர்கள் – கலந்தரையாடல்

கருத்துத்தூவானம்  :  துனை வினைகள் 

  • ஒரு சொல் நேரடிப் பொருள் தராமல் முதல் வினைக்குத் துணையாய் வேறு பொருளில் வருவது துனைவினை  என விளக்குதல்

மதிப்பீடு :

  • இந்திராவின் கனவு என்ன?
  • உலகில் நீர் இல்லையெனில் என்ன ஆகும்
  • பொருத்தமான துணை வினையைப் பயன்படுத்துக
  • மனிதனையும் விலங்குகளையும் (வேறு) —- மொழி
  • காலந்தோறும் தன்னைப் (புதுப்பித்து) —–மொழி தமிழ்

தொடர்பணி :

  • தன்னிர் வாகனம் வந்த நேரம்- கருமேகங்கள் திரண்டன – அப்போது கதையை நிறைவு செய்க
  • சந்தையில் நடைபெறும் உரையாடலைத் துனை வினைகள் பயன்படுத்தி. எழுதுக.

Leave a Comment