CLASS 7 TAMIL LESSON PLAN FOR JULY 3RD WEEK (18.07.22 TO 22.07.22)

CLASS 7 TAMIL LESSON PLAN FOR JULY 3RD WEEK (18.07.22 TO 22.07.22)

தலைப்பு :

  • காடு
  • அப்படியே நிற்கட்டும் அந்த மரம்

பாடத்தின் தன்மை :

  • காட்டின் பெருமையினை மட்டும் விளக்குவதால், தனித்தவகையைச் சார்ந்தது.
  • நாவல் மரத்தின் பெருமையினை மட்டும் விளக்குவதால், தனித்தவகையைச் சார்ந்தது.

கற்கும் முறை :

  • ஆசிரியர் பாடலைப் பாட அதனைக் கேட்டு மாணவர்கள், தானே கற்றல்.

துணைக்கருவிகள்  :

  • கவிதைகள் மூல நூல்
  • விளக்கப்படம்
  • மின்அட்டை
  • அப்படியே நிற்கட்டும் அந்த மரம் :நூல்
  • காட்சிப்படம்

பாட அறிமுகம்  :

  • காடு குறித்து நீவிர் அறிந்த செய்தியைக் கூறுக? என்ற வினாவினை மாணாக்கர்களிடம் கேட்டு, அவ்விடைகளின் வழியே பாட அறிமுகம் செய்தல்.
  • நாவல் மரம் குறித்து நீவிர் அறிந்த செய்தியைக் கூறுக? என்ற வினாவினை மாணாக்கர்களிடம் கேட்டு, அவ்விடைகளின் வழியே பாட அறிமுகம் செய்தல்.

வாசித்தல்  :

  • நூல்வெளிப் பகுதியினை ஆசிரியர் உரிய ஒலிப்புடன் வாசித்துக் காட்ட மாணாக்கர்கள் தனித் தனியே வாசித்தல் மேற்கொள்ளுதல்.
  • புதிய சொற்களை அடிக்கோடிடல்
  • அகராதி கொண்டு பொருள் அறிந்து எழுதுதல்
  • சந்த நயத்தோடு வாசித்தல்

கற்றல் திறன்கள்  :

  • புதிய சொற்களை அடிக்கோடிடல்
  • அகராதி கொண்டு பொருள் அறிந்து எழுதுதல்

மனவரைபடம்  : காடு

மனவரைபடம்  : அப்படியே நிற்கட்டும் அந்த மரம்

தொகுத்தல்  : காடு

  • காட்டிலுள்ள மலர்களைக் காணும் கண்கள் குளிர்ச்சி பெறும். காடு பல வகையான பொருள்களையும் காய்கனிகளையும் தரும். > எல்லோரும் சேர்ந்து மகிழ்ந்திட குளிர்ந்த நிழல் தரும்.
  • காட்டு விலங்குகளுக்கு உணவாகக் கனி தரும்.
  • பன்றிகள் காட்டிலுள்ள கிழங்குகளைத் தோண்டி உண்ணும்.நரிக் கூட்டம் ஊளையிடும்.
  • மிகுந்த சுவையுடைய தழையை யானைகள் தின்றபடி புதிய நடைபோடும்.
  • இயற்கைத் தங்குமிடமாகிய காட்டில் சிங்கம், புலி, கரடி, சிறுத்தை ஆகிய விலங்குகள் எங்கும் அலைந்து திரியும்.

தொகுத்தல்  : அப்படியே நிற்கட்டும் அந்த மரம்

  • ஊரின் வட எல்லையில் ஐந்து வயதில் பார்த்த போதும், ஐம்பது வயதைத் தாண்டி இப்பொழுது பார்க்கின்ற போதும், தாத்தாவின் தாத்தா நட்டு வைத்த நாவல் மரம் அப்படியே இருக்கின்றது.
  • அந்த நாவல் மரத்தில் பச்சைக்காய்கள் மாறி செந்நிறமாய்ப் பழுக்கும் போது சிறுவர் மனங்களில் மகிழ்ச்சி பொங்கும்.
  • பளபளக்கும் பச்சை இலைகளுடக் கருநீலக்கோலிக்குண்டுகள் போல நாவற்பழங்கள் கிளைகளில் தொங்குவதைப் பார்க்கும் போதே நாவில் நீர் ஊறும்.
  • காக்கை,குருவி,மைனா,பெயரறியாப் பறவைகள்,அணில்,காற்று ஆகியன உதிர்த்துவிடும் நாவல் பழங்களைப் பொறுக்க சிறுவர் கூட்டம் அலைமோதும்.
  • தங்கைகள் தங்கள் அக்காக்களுக்காகக் கையில் பெட்டியுடன் நாவல்பழம் பொறுக்குகின்றனர்.
  • இரவின் மெல்லிய நிலா வெளிச்சத்தில் பழந்தின்னி வௌவால் கூட்டம் மரத்தில் பழம் தின்னப் படை எடுக்கும்.
  • அப்பா வரும் வரை நாவல் மர நிழலில் கிளியாந்தட்டு விளையாடுவோம். நேற்று நண்பகல் என் மகன் விளையாடியதும் இந்த நாவல் மர நிழலில் தான்.

வழங்குதல்  :

  • மனவரைபடக் கருத்துகளை குழுவினில் வழங்கி, ஒட்டு மொத்த தொகுத்தல் செய்தல்.

வலுவூட்டல்  :

  • காட்டின் காட்சிகளை மடிகணினியில் காட்டி, பாடத்தை வலுவூட்டுதல்.
  • இயற்கை சார்ந்த பிற பாடல்களை ஒலிபெருக்கி மூலம் பாடத்தை வலுவூட்டுதல்.

மதிப்பீடு  :

  • மாணாக்கர் திறன் அறிய எளிமையான சில வினாக்கள் கேட்டல்.

வினாக்கள்:

  • குளிர்ந்த நிழல் தருவது எது?
  • நடனமாடுவது எது?
  • சுரதாவின் இயற்பெயர் யாது?
  • நாவல் மரம் எத்தனை தலைமுறையாக இங்கு நிற்கின்றது?
  • பாடலில் உள்ள மோனைச் சொற்களைக் கண்டுபிடித்துக் கூறுக?
  • அப்படியே நிற்கட்டும் அந்த மரம். அது எந்த மரம்?

குறைதீர் கற்பித்தல்  :

  • மெல்ல அரும்பும் மாணாக்கர்களுக்கு பாடலையும் பொருளினையும் கற்பித்துத் தனியே பயிற்சி அளித்தல்.

எழுதுதல் :

  • சொல்வதை எழுதுதல்
  • பாடநூல் மதிப்பீட்டு வினாக்கள் எழுதுதல்.

கற்றல் விளைவுகள்  :

  • மரத்தின் சிறப்பினை பாடல் வழி மாணவர்கள் அறிந்துகொண்டனர்.
  • நாவல் மரத்தின் பெருமைகளை இப் பாடல் வழி மாணவர்கள் அறிந்து கொண்டனர்.

தொடர்பணி  :

  • காடு மற்றும் பற்றிய கவிதைகளை எழுதி வரச் சொல்லுதல், காடு சார்ந்த பிற கவிஞர்களின் கவிதைகளை அறிந்து எழுதி வரச் சொல்லுதல்.
  • ராஜமார்த்தாண்டன் வாழ்க்கை வரலாற்றை எழுதி வரச் சொல்லுதல், ராஜமார்த்தாண்டன் பிற கவிதைகளை அறிந்து எழுதி வரச் சொல்லுதல்.

Leave a Comment