CLASS 8 TAMIL LESSON PLAN FOR JULY 3RD WEEK (18.07.22 TO 22.07.22)
தலைப்பு :
- ஓடை
- கோணக்காத்துப் பாட்டு
பாடத்தின் தன்மை :
- ஓடையின் பெருமையினை மட்டும் விளக்குவதால், தனித்தவகையைச் சார்ந்தது.
- நாவல் மரத்தின் பெருமையினை மட்டும் விளக்குவதால், தனித்தவகையைச் சார்ந்தது.
கற்கும் முறை :
- ஆசிரியர் பாடலைப் பாட அதனைக் கேட்டு மாணவர்கள், தானே கற்றல்.
துணைக் கருவிகள் :
- தொடுவானம் கவிதை நூல்
- விளக்கப்படம்
- மின்அட்டை
- மடிகணினி
- பஞ்சக்கும்மிகள் : நூல்
- காட்சிப்படம்
பாட அறிமுகம் :
- ஓடை குறித்து நீவிர் அறிந்த செய்தியைக் கூறுக? என்ற வினாவினை மாணாக்கர்களிடம் கேட்டு, அவ்விடைகளின் வழியே பாட அறிமுகம் செய்தல்.
- புயல் குறித்து நீவிர் அறிந்த செய்தியைக் கூறுக? என்ற வினாவினை மாணாக்கர்களிடம் கேட்டு, அவ்விடைகளின் வழியே பாட அறிமுகம் செய்தல்.
வாசித்தல் :
- நூல்வெளிப் பகுதியினை ஆசிரியர் உரிய ஒலிப்புடன் வாசித்துக் காட்ட மாணாக்கர்கள் தனித் தனியே வாசித்தல் மேற்கொள்ளுதல்.
கற்றல் திறன்கள் :
- புதிய சொற்களை அடிக்கோடிடல்
- அகராதி கொண்டு பொருள் அறிந்து எழுதுதல்
- சந்த நயத்தோடு வாசித்தல்
மனவரைபடம் : ஓடை

மனவரைபடம் : கோணக்காத்துப் பாட்டு

தொகுத்தல் : ஓடை
- நன்செய்,புன்செய்க்கு நீர்வளம் – பயிர் செழித்தல் – உண மூலம் வறுமை போக்கல்.
- ஓடையில் விளையாட ஆர்வம்,கல்லில் உருண்டு,நெழிந்து, தவழ்ந்து செல்லும் ஓடையில் நீந்த ஆசை, சலசல ஒலியினை எந்தப் பள்ளியில் படித்தாய் ஓடையே! நூல்களால் வருணிக்க முடியாத அழகு உன் அழகு.
தொகுத்தல் : கோணக்காத்துப் பாட்டு
- கடல் கப்பல் கவிழ்ந்தது.ஆர்க்காடு முதல் மைசூர் வரை சாலையில் நடக்கும் மக்கள் தடுமாற்றம்.
- புயல் காற்றால் வீட்டுக் கூரைகள் பிரிந்து மொத்தமாகச் சரிந்தன. வாங்கல் ஊர் சிறப்பான தென்னம்பிள்ளை வீணானது.காங்கேய மேற்பகுதி பருத்திச் செடி சிதைதல்.
- மாடி வீடுகள் அடியோடு வீழ்ந்தன.வீட்டினர் அலறி அடித்துக் கொண்டு ஓடினர்.தொண்டை நாட்டு மரங்கள் ஒடிந்தன.
- கடல் கப்பல் கவிழ்ந்தது.ஆர்க்காடு முதல் மைசூர் வரை சாலையில் நடக்கும் மக்கள் தடுமாற்றம் அடைந்தனர்.
- கொல்லி மலைச்சுற்றிப் புயல்.முருகா! இதை எப்படித் தாங்குவோம், துன்பம் தவிர்த்துக் காப்பாற்று.
வழங்குதல் :
- மனவரைபடக் கருத்துகளை குழுவினில் வழங்கி, ஒட்டு மொத்த தொகுத்தல் செய்தல்.
வலுவூட்டல் :
- ஓடையின் காட்சிகளை மடிகணினியில் காட்டி, பாடத்தை வலுவூட்டுதல்.
- புயல் சார்ந்த பிற பாடல்களை ஒலிப்பெருக்கி பாடத்தை வலுவூட்டுதல்.
மதிப்பீடு :
- மாணாக்கர் திறன் அறிய எளிமையான சில வினாக்கள் கேட்டல்.
வினாக்கள் :
- தமிழகத்தின் வோர்ட்ஸ்வொர்த் யார்?
- எதில் விளையாட கவிஞருக்கு ஆர்வம்?
- வள்ளைப்பாட்டு என்றால் என்ன?
- தென்னம்பிள்ளைகள் எங்கு வீணாயின?
- பருத்திச்செடிகள் எங்குச் சிதைந்தன?
- மரங்கள் எங்கு ஒடிந்து வீழ்ந்தன?
குறைதீர் கற்பித்தல் :
- மெல்ல அரும்பும் மாணாக்கர்களுக்கு பாடலையும் பொருளினையும் கற்பித்துத் தனியே பயிற்சி அளித்தல்.
எழுதுதல் :
- சொல்வதை எழுதுதல்,
- பாடநூல் மதிப்பீட்டு வினாக்கள் எழுதுதல்.
கற்றல் விளைவுகள் :
- ஓடையின் அழகு மற்றும் சிறப்பினை பாடல் வழி மாணவர்கள் அறிந்து கொண்டனர்.
- புயலின் கொடுமைகளை இப்பாடல் வழி மாணவர்கள் அறிந்து கொண்டனர்.
தொடர்பணி :
- வாணிதாசன் வாழ்க்கை வரலாற்றைச் சுருக்கமாகத் தொகுத்து எழுதிவரச்சொல்லல்.
- நீவிர் அறிந்த புயல்களின் பெயர்களை எழுதிவரச் சொல்லல்.